நாவலப்பிட்டிய- கலப்பிட்டிய பிரதான வீதியில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி இயந்திரத்தில் சிக்கி பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கிரிமெத்தியாவ, 33 மைல்கல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணியில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஜே.சி.பி வாகனத்தின் உதவியாளரான இவர், வாகனத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய முயன்ற சமயத்தில், திடீரென வாகனத்தின் ஒரு பகுதி கீழே விழுந்ததால், வாகனத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.
அவரை உடனடியாக வாகனத்திலிருந்து மீட்டெடுத்த போதும், அவர் உயிரிழந்திருந்தார்.