இந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகை டாப்ஸி இவர் பெண்கள் மீதான வன்முறை மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுப்பவர்.
இந்நிலையில் இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர் ஒருவர் டாப்ஸியின் உடல் மீது தனக்கு விருப்பம் இருப்பதாக கூறியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை டாப்ஸி எனக்கும் எனது உடலை பிடிக்கும் முக்கியமாக என மூளையை எனக்கு பிடிக்கும். உங்களுக்கு எது பிடிக்கும்? என கேட்டிருந்தார்.
அதாவது அந்த ரசிகரின் பதிலால் கோபமடைந்து அவரை மூக்கறுக்க வேண்டும் என இவ்வாறு டாப்ஸி பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் டாப்ஸி கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு டாப்ஸி உடலை பிடிக்கும் என கருத்திட்ட நபருக்கு அழைப்பு வந்தது.
அந்த நிகழ்ச்சியில் டாப்ஸி கலந்து கொள்கிறார் என்பது அவருக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் அவரும் அங்கு சென்றார். அங்கு டாப்ஸி வந்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் அந்த நபரை சந்தித்த டாப்ஸி நடிகைகள் என்றால் கேவலமாக பேசுவீர்களா? எங்களுக்கும் குடும்பம் வாழ்க்கை என்று இருப்பது உங்களுக்கு தெரியாதா? என கோபமாக பல கேள்விகளை கேட்டு அவருக்கு கேள்விகளால் விருந்தே வைத்து விட்டார்.
அந்த நபரும் இனிமேல் பெண்களை பற்றி கேவலமாக பேசமாட்டேன் என கூறி டாப்ஸியிடம் மன்னிப்பு கேட்டார். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.