மட்டக்களப்பு – முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான காணியின் ஒரு பகுதியை சட்டவிரோதமான முறையில் சிலர் ஆக்கிரமித்திருந்தனர்.
இதன்போது குறித்த காணி வேலியோரம் மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் வேலியை தகர்க்க முற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி நீதிமன்றத்தின் தடை உத்தரவுப் பத்திரத்தை வேலியில் ஒட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற தடை உத்தரவை கிழித்தெறிந்த மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் வேலி கம்பை பிடுங்கி எறிந்த நிலையில் அவரோடு வந்த பொதுமக்களும் வேலியை பிடுங்க முற்பட்டுள்ளனர்.
வேலியை பிடுக்க முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்த நிறுத்த முற்பட்ட போதும் அந்த முயற்சி பலனளிக்காமையால் பொலிஸ் பாதுகாப்பு படையினரால் மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கானவர்கள் மீண்டும் வேலியை பிடுங்கிய போது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், இதன்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட போது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டை பிரயோம் செய்து மோதலை சுமூக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த தந்த கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அநுர தர்மதாச மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரதன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நாளைய தினம் காணி தொடர்பான கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறும், பாடசாலை காணி வரைபடத்தில் உள்ளவாறு காணி பெற்றுத் தரப்படும் என கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அநுர தர்மதாச உறுதியளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் கலைந்து சென்றதுடன், பொதுமக்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் அத்தியட்சகரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளர்.
மட்டக்களப்பு, வாழசைச்சேனை, முறாவோடை பாடசாலை மைதானத்தை அத்துமீறி அபகரித்து குடிசை அமைத்துள்ளதை அகற்ற மட்டக்களப்பு சிங்கள-தமிழ் இனத்தின் விழிப;புணர்வுக்கான அமைப்பின் தலைவர் மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையிலான தமிழ், சிங்கள பொதுமக்கள் அதனை நேற்று செவ்வாய்க்கிழமை மைதானத்தை முற்றுகையிட்டதையடுத்து அங்கு பெரும்பதற்றம் நிலவியது.
மட்டக்களப்பு பிள்ளையாரடி ஆலயத்தில் மத நல்லிணக்கத்திற்காக விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் அங்கு மட்டக்களப்பில் இடம்பெறும் காணி அபகரிப்பிற்கும் முறாவோடை பாடசாலை மைதான அபகரிப்பிற்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த பாடசாலைக்கு சென்று, அங்கு அமைக்கப்பட்ட வேலிகளை கழற்றமுற்பட்டனர்.
இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிசாருக்கம் ஆர்பாட்டகாரர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன் ஆர்பாட்டகாரர்கள் அதனையம் மீறி வேலியை கழற்ற முற்பட்டனர்.
இதனையடுத்து பொலிசார் அவர்கள் மீது தடியடிபிரயோகம் செய்தனர். இதில் பெண்கள் உட்பட 4 பேர் காயடைந்தனர்.
இதேவேளை பொலிசார் மீது ஆர்பாட்டகாரர்கள் கல்விச்சு நடாத்தியதையடுத்து பொலிசார் புகைக்குண்டுகள் வீசி ஆர்பாட்டகாரர்களை கலைத்தனர் இதனையடுத்து அங்கு சில மணிநேரம் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு மேலதிகமாக கலகம் அடக்கம் பொலிசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், கிழக்குமாகாண காணி ஆiணையாளர் வருகை தந்து ஆர்ப்பாட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்த காணி பாடசாலைக்குரியது எனவும் இது தொடர்பாக இன்று புதன்கிழமை காலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் அரசாங்க அதிபர், பொலிசார், காணி ஆணையாளர், பிரதேச செயலாளர், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொண்ட விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதுடன் அதில் தீர்வை பெற்றத் தருவதாகவும் பாடசாலை மைதானத்திற்கு வரைபடத்தில் உள்ள காணியில் ஒரு அங்குலம் கூடவிடாது அதனை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
/p>