கிறீஸ் நாட்டில், பாரிய பயணிகள் விமானமொன்று ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக, கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் தலையிலிருந்து சில மீற்றர் உயரத்தில் தாழ்வாகப் பறந்தபோது பிடிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கிறீஸின் வடமேற்கு பகுதியில் ஸ்கியாதோஸ் தீவில் கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் அமைந்துள்ளது.
கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் தரையிறங்க வரும் விமானங்கள் மிகவும் தாழ்வாகப் பறக்கும்.
அவ்விமானங்கள் பறக்கும்போது பயணிகள் செல்பீ எடுப்பது வழக்கம்.
ஆனால், விமானங்கள் தரையிறங்கும்போது, விமான என்ஜின்களில் இருந்து வெளிப்படும் வேக காற்றினால் சுற்றுலாப் பயணிகள் தூக்கி வீசப்பட்டு காயமடையவோ, உயிரிழக்கவோ நேரிடும் என்பதால் ஓடுதளத்தின் முன்பாக ‘செல்பி’ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், ‘பிரிட்டிஷ் எயார்வேஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ஸ்கியாதோஸ் விமான நிலையத்துக்கு வந்தது.
இந்த விமானம் ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக வழக்கத்தை விட தாழ்வாகப் பறந்து வந்தது. அதாவது கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் தலையிலிருந்து சில மீற்றர் உயரத்தில் தாழ்வாகப் பறந்தது.
ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல விமானத்தின் கீழ்பகுதியில் நின்று கொண்டு ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.
விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோ: