வாழைப்பழக்கடையின் முதலாளியின் மீது குறித்த இளைஞன் கத்தியால் குத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக சென்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை அந்த இளைஞன் கத்தியால் குத்தியுள்ளார்.
கான்ஸ்டபிளுடன் சென்றிருந்த பொலிஸார் தற்பாதுகாப்புக்காக மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்திலேயே அந்த இளைஞன் பலியாகியுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முதலாளியும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.