சென்னை : தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் கடந்த 8-ம் தேதி தி.மு.க தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக காலமானார்.
கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்சியில் நேரில் பங்கேற்க இயலாத விஜயகாந்த் அவரது மறைவிற்கு கண்ணீர் மல்க வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்தார்.
மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் அதிகாலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் நேரில் அஞ்சலி.#Vijayakanth | #Karunanidhi | #karunanidhimemorial | #DMDK pic.twitter.com/PlYPH1HPwq
— Thanthi TV (@ThanthiTV) 20 août 2018
பார்ப்பவர்களை நெகிழச்செய்யும் விதமாக இருந்த அந்த வீடியோவில், ‘ நான் அமெரிக்காவில் இருந்தாலும் என் எண்ணங்களும், நினைவுகளும் தமிழகத்தில்தான் இருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதிஷ் ஆகியோருடன் மெரினாவுக்கு சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.