ரஷ்யாவில் குடியிருப்பு கட்டிடமொன்றில் தீ அனர்த்தம் ஏற்பட்ட போது தாயொருவரால் 4 ஆவது மாடி ஜன்னலால் தூக்கி வீசப்பட்ட இரு பிள்ளைகளை கீழே கூடியிருந்தவர்கள் கட்டில் விரிப்பால் தாங்கிப்பிடித்து காப்பாற்றிய அதிசய சம்பவம் ரஷ்யாவில் இடம் பெற்றுள்ளது.
ரஷ்ய பஸ்க் கொர்டோஸ்டன் குடியரசிலுள்ள எனேர் ஜெற்றிக் எனும் இடத்திலுள்ள குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தின் போதே மிலர் அக்ஸ்கவா (36 வயது) என்ற பெண், தனது பிள்ளைகளான வன்யா,(4வயது) மற்றும் நடல்யாவை (13 வயது) நான்காவது மாடி ஜன்னலால் தூக்கி வீசியுள்ளார்.
இந்நிலையில் கீழே தயாராக கூடியிருந்த மக்கள் கட்டிலில் விரிப்பில் அவர்கள் இருவரையும் தாங்கிப்பிடித்து காப்பாற்றியுள்ளனர்.
மேற்படி பெண் தீயணைப்பு படை வீரர்களால் பின்னர் காப்பாற்றப்பட்டார்.