அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சி. தீப்பிகா 3..5 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டி சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
சி. தீப்பிகா
இதே நிகழ்ச்சியில் பங்குபற்றிய அளவெட்டி, அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த பி. தனுசங்கவி (2.80 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
2015இல் நீர்கொழும்பு நியூஸ்டெட் கல்லூரி சார்பாக போட்டியிட்டு அயிஷ்ரா விக்ரமசேகர நிலைநாட்டிய 3.12 மீற்றர் என்ற சாதனையையே தீப்பிகா இன்று முறியடித்து புதிய சாதனைக்கு சொந்தக்காரரானார்.
சி. தீப்பிகா
பி. தனுசங்கவி
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் நான்காம் நாளான இன்றைய தினம் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தீப்பிகா நிலைநாட்டிய புதிய சாதனையுடன் மேலும் 4 சாதனைகள் புதுப்பிக்கப்படடன.
மேலும் இருபாலாருக்கும் இரண்டு வயது பிரிவுகளில் நடத்தப்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் வட மாகாணம் சார்பாக பங்குபற்றியவர்களில் தீப்பிகாவுடன் மூவர் புதிய சாதனைகளை நிலைநாட்டியதுடன் நால்வர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
போட்டியின் முதலாம் நாளன்று 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஏ. புவிதரன் (4.82 மீற்றர்), இரண்டாவம் நாளன்று 20 பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் என். டக்சிதா (3.35 மீற்றர்.) ஆகியோர் புதிய சாதனைகளை நிலைநாட்டியிருந்தனர். இவர்கள் இருவரும் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.
இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் 45.88 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். இவர் நேற்றுமுன்தினம் குண்டெறிதல் போட்டியில் 15.95 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார்.
எஸ். மிதுன்ராஜ்
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் வேலணை மத்திய கல்லூரியைச் சேர்ந்த எஸ். சுஜீபன் 1.95 மீற்றர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
நேற்றைய தினம் மாலை நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வேலணை மத்திய கல்லூரியைச் சேர்ந்த எஸ். சுஜீபன் 151.12 மீற்றர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
எஸ். சுஜீபன்
எஸ். வானுசன்
இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான உடற்பயிற்சிப் போட்டியில் இளவாலை கன்னியாஸ்திரிகள் மட பாடசாலையைச் சேர்ந்தர்ந்த ஏ. மேரி லக்ஷியாவுக்கு அதி சிறந்த தலைமைத்துவக்கான வீராங்கனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஏ. மேரி லக்ஷியா