பூலோகம் படத்திற்காக த்ரிஷா தொடையிலும், கைகளிலும் ஜெயம் ரவியின் உருவத்தை பச்சை குத்தியுள்ளார்.
பொலிவுட் நடிகைகள் முதல் டொலிவுட் நடிகைகள் வரை தமக்கு பிடித்த நபரின் பெயரை பச்சை குத்திக்கொள்வது நகரிகம்.
இதேபோல் நடிகை நயன்தாரா தனது மாஜி காதலன் பிரபுதேவா பெயரை குறிக்கும் வகையில் பிரபு என்று பச்சை குத்தி இருந்தார். காதல் முறிந்த பிறகும் அந்த பெயரை அழிக்காமல் படங்களிலும் நடித்து வருகிறார். அதை அழிக்க முடியாது என்பதால்தான் நயன்தாரா வருத்தப்படுகிறார்.
த்ரிஷா தனது உடலில் பூ வடிவில் பச்சை குத்தி இருப்பதுடன் முதுகில் தனது ராசி சின்னமான ரிஷபம் வரைந்திருக்கிறார்.
இந்நிலையில் தொடையிலும், கைகளிலும் ஜெயம் ரவியின் உருவத்தை பச்சை குத்தியுள்ளார். இதை வேறுமாதிரியாக கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.
பூலோகம் படத்தில் ஜெயம் ரவி குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார். அவரது காதலியாக த்ரிஷா நடிக்கிறார். இப்படத்துக்காகத்தான் ஜெயம் ரவியின் உருவத்தை தொடையிலும் கைகளிலும் பச்சை குத்தியுள்ளார் த்ரிஷா.
படப்பிடிப்பு முடிந்ததும் அதனை அழித்துவிட்டார். வழக்கமாக காதலி தனது காதலன் பெயரை பச்சை குத்திக்கொள்வார்கள். இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்பதற்காக காதலனின் உருவத்தையே காதலி வரைந்திருப்பது போல் படமாக்கியுள்ளனர்.