தனக்கு எதிராக பொய் குற்றம் சுமத்தி விளக்கமறியலில் வைப்பதற்கு முயற்சிக்கும் FCID விசாரனை அதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் லலித் ஷாந்தகேவின் புதல்வியின் திருமண வைபவத்திற்கு VAT 69 விஸ்கி போத்தல்கள் 50 பரிசாக தான் மற்றும் தனது சகோதரரான யோஷித ராஜபக்ஷ பெற்றுக் கொடுத்ததாக ஊடக சந்திப்பில் தெரிவிப்பதற்கு தயார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெற்கு களுத்துறையைச் சேர்ந்த உதவி பொலிஸ் பரிசோதகரான லலித் ஷாந்தகேவின் வீட்டிற்கு குறிப்பிட்ட விஸ்கி போத்தல்கள் முச்சக்கர வண்டியின் ஊடாக கொண்டு சென்றதாகவும் களுத்துறை பிரதேசத்திலுள்ள கடையொன்றில் பெற்றுக் கொண்டதற்கான ரசீதுகள் அனைத்தும் மற்றும் FCID அதிகாரிகள் அத்திருமண வைபவத்திற்கு வருகை தந்து VAT 69 அருந்தும் காணொளியும் தன்னிடம் இருப்பதாக தெரிவித்த நாமல் ராஜபக்ஷ அவை அனைத்தும் தான் மற்றும் தனது சகோதரனும் ஊடகச் சந்திப்பில் தெரிவிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர்களது நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏதேனும் ஒரு காரணத்திற்காக தான் மீண்டும் விளக்கமறியலில் வைக்க நேரிடும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரைப் பற்றி வெளிப்படுத்துவதற்கு தான் ஒரு போதும் தயங்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.