உடனே இதற்கு போட்டியாக பாகிஸ்தானும் அணுகுண்டுகளை தயாரித்தது. தற்போது இந்தியாவை விட பாகிஸ்தானில் அணுகுண்டுகள் அதிக அளவில் உள்ளன.
ஆனால், பாகிஸ்தானில் அணுகுண்டுகள் இந்தியாவை போல் பாதுகாப்பான முறையில் இல்லை. இந்தியாவில் தொடர்ந்து மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது.
எனவே, அரசு முடிவு எடுத்தால் தான் அணு குண்டுகளை வீசும். மேலும் எந்த சூழ்நிலையிலும் தங்கள் தரப்பில் இருந்து முதலாவதாக அணுகுண்டுகளை பயன்படுத்துவதில்லை என்ற கொள்கை முடிவை இந்தியா எடுத்துள்ளது.
ஆனால், பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி இருந்தாலும் அந்த ஆட்சிகள் உரிய அதிகாரத்துடன் இருப்பதில்லை. அங்கு ராணுவத்தினர் மற்றும் உளவுப்படையினரின் கை தான் ஓங்கி இருக்கிறது.
அது மட்டும் அல்ல, அங்கு அடிக்கடி ராணுவ ஆட்சியும் ஏற்படுகிறது. தீவிரவாதிகள் கையில் கூட அணுகுண்டு சென்று விடும் நிலையில்தான் இருக்கிறது. எனவே, பாகிஸ்தானால் இந்தியாவுக்கு அணுகுண்டு ஆபத்து நிரந்தரமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை ஏற்படுத்தி அதிபராக இருந்த முஷரப் இந்தியா மீது நான் அணுகுண்டுகளை வீச திட்டமிட்டேன் என்று கூறி இருக்கிறார்.
தற்போது நாட்டை விட்டு வெளியேறி துபாயில இருக்கும் அவர் ஜப்பான் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் அதிபராக இருந்த கால கட்டத்தில் 2001-ல் இந்திய பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் இந்தியா எங்களுக்கு எதிராக நடந்து கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் ஏற்பட்டது.
2002-ல் உச்சக்கட்ட பதட்டம் நிலவிய நிலையில் நான் இந்தியா மீது அணுகுண்டுகளை வீசலாமா? என்று தீவிரமாக யோசித்தேன்.
அப்போது இரு நாடுகளுமே அணு ஆயுதங்களை ஏவுகணையில் பொருத்தி தயாராக வைத்திருக்கவில்லை. ஆனாலும், நினைத்தால் ஓரிரு நாளில் அவற்றை பொறுத்தி விட முடியும்.
பாகிஸ்தான் அணு குண்டு தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடியாக இந்தியாவும் அணுகுண்டு தாக்குதல் நடத்தும் என எதிர்பார்த்தேன். இந்த அச்சத்தால் தான் அந்த முடிவை கைவிட்டு விட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.