நீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்று அவரது பாதுாவலரை சுட்டுக் கொன்றவன் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளதாக தெரியவருகின்றது.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் மீது தாக்குதல் நடத்தியவர் நல்லூரை சேர்ந்த செல்வராசா ஜெயந்தன் எனும் இந்த நபர் நீதிபதியை கொலைசெய்த முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு காவல்துறையினரால் தேடப்படுகின்றார் .
இவரை காண்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது தொலைபேசி மூலமோ அறியத்தருமாறு கேட்கப்படுகின்றனர் . இவர் தொழில் நிமித்தம் புங்குடுதீவில் குறிப்பிட்ட காலம் தங்கியிருந்துள்ளார் .
இவர் 2 முறை மணம் முடித்தவர் என்றும் அறியப்படுகிறது. ஒரு மனைவி மண் கும்பானிலும், மற்றைய மனைவி (பூனரியை சேர்ந்தவர்) புங்குடுதீவிலும் வசித்து வருகிறார்கள்.
இவர் விடுதலைப் புலிகளின் துணைப் படையில் இருந்தவர் என்றும். வன்னி மாவட்டத்தை கரைத்து குடித்த ஆள் என்றும் கூறப்படுகிறது. சம்பவ தினத்தன்று. அவர் நிறை வெறியில் இருந்துள்ளார்.
இருப்பினும் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து அவரை நோக்கி சுட்டுள்ளார். பின்னர் தப்பிச் சென்ற அவரை பிடிப்பது என்பது சிங்கள பொலிசாருக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று விடையம் அறிந்த வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள்.
ஏன் எனில் அவர் தற்போது வன்னிக் காட்டுக்குள் சென்றிருக்க வாய்ப்புள் உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் சண்டையிட்ட பழக் கடைக்காரர், இவரது 2 மனைவிகள் என்று பலரை பொலிசார் தற்போது விசாரணை செய்து வருகிறார்கள்.
தப்பி ஓடும் வேளை அவர் வேண்டும் என்றே துப்பாக்கியை கீழே போட்டு சென்றதாகவும்.
இல்லையென்றால் அவர் துப்பாக்கியோடு தப்பிச் சென்றதால், அவர் மிக மிக ஆபத்தான நபர் என்று கூறி, பொலிசார் கண்டதும் சுடும் உத்தரவை பெற்று அவரை போட்டு தள்ள திட்டம் போட்டிருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.