பெல்ஜியத்தில் நேற்று வியாழக்கிழமை நேட்டோவின் புதிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நேட்டோ தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் ஏனைய தலைவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக வந்தபோது மொன்டெக்நீரோ பிரதமர் (prime minister of Montenegro) டூஸ்க்கோ மார்கோவிக்கை (Dusko Markovic) கையால் தள்ளி விலத்தி முன்னுக்கு சென்று புகைப்படத்துக்கு முகம்காட்டிய செயல் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
பல ஊடகங்களும் இந்த காணொளிக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் இந்த காணொளி வேகமாக பரவிவருகிறது.
24 க்கும் அதிகமான தலைவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக வந்தபோது தன்னை விலத்தி பின்னுக்கு தள்ளியம்மையை பெரிதுபடுத்தாத மார்கோவிக் இது தன்னை பாதிக்கவில்லை என்றும் புகைப்படத்தில் அமெரிக்கா முன்னுக்கு இருக்கவேண்டும் என்று விரும்புவது இயற்கை தானே என்றும் கூறியுளளார்.