நோர்வூட் சென்ஜோன் டிலரி கிழ் பிரிவு தோட்டபகுதியில் பொகவந்தலாவ நோர்வூட் பிரதான வீதியின் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கால்வாய் ஒன்றில் இனந் தெரியதாக பெண் ஒரவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கபட்டுள்தாக நோர்வூட் பொலிஸார் தெரிவிதத்னர்.
09.07.2018 திங்கள் கிழமை காலை 08 மணி அளவில் இந்த சடலம் கண்டு பிடிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சென்ஜோன் டிலரி கிழ் பிரிவு தோட்டமக்கள் காலை தொழிலுக்கு சென்ற போதே குறித்த சடலத்தினை இனங்கண்டு நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரனைகலை ஆரம்பித்துள்ளனர்
சடலமாக இனங்கண்ட பெண் இதுவரையிலம் அடையாளம் காணபடவில்லையெனவும் 35வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு சடலமாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகறது.
குறித்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலை என்பதை அறிவதற்காக சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதவான் வரவழைக்கப்படவுள்ளதாகவும் சம்பவம தொடர்பில் மேலதிக விசாரனைகலை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.