மனிதனின் அடிப்படைத் தேவை உணவுதான். பசி என்ற உணர்வுதான் இந்த உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம்.
இதை இவ்வளவு சீரியஸாகச் சொல்வதை விட இந்த வீடியோவைப் பார்த்தாலே புரிந்துவிடும்.
கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் வீடியோ இது. `பசிக்கும்ல.. நான் சாப்பிடக் கூடாதா?’ என்று மழலை மாறாமல் பரிதாபக் குரலில் சிறுவன் பேசும் வீடியோ அனைவரின் மனதையும் ஆட்கொண்டுவிட்டது. தமிழக மக்களுக்கு இந்த வீடியோ புத்தாண்டு கிஃப்டாக அமைந்துவிட்டது.
சங்கத்தை விட சாப்பாடுதான் முக்கியம் என்னும் உண்மையை உரக்கப் பேசிய இந்த வைரல் சிறுவனின் பெயர் பிரணவ்.
தற்போது பெற்றோர்களுடன் நெல்லையில் வசித்துவரும் பிரணவ்வின் சொந்த ஊர் தூத்துக்குடி.
எல்.கே.ஜி படிக்கும் சிறுவன் பிரணவ், பள்ளி விடுமுறையில் குலசேகரப்படினம் வந்துள்ளார்.
அந்தச் சமயத்தில் அவரின் மாமா எடுத்த வீடியோதான் தமிழ்நாட்டையே கலக்கிவிட்டது.
சிறுவனிடம் வம்பிழுத்த அவரின் மாமா, விளையாட்டாகச் செய்தது. இப்போது சிறுவனை வைரல் ஸ்டார் ஆக்கிவிட்டது. பிரணவுக்குக் கதை சொல்வது என்றால் கொள்ளை பிரியமாம்.
பிரணவ்வை வைத்து மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக அஜித், ரஜினி வைத்துப் பகிரப்பட்ட மீம் வேற லெவல். `கொல காண்ட்ல இருக்கேன்’ என்று பேட்ட காளியும், `ஒத்தைக்கு ஒத்த வாடா’ என்று விஸ்வாசம் தூக்குதுரையும் மிரட்டுகின்றனர்.
`பசிக்குது சாப்பிட்டு வரேன்’ என்று ஒரே டைலாக்கில் அத்தனை மாஸையும் தவிடுபொடியாக்கிவிட்டார் பிரணவ்.
`குணமா சொல்லணும்’ என்று சொல்லி வைரலாகிய சிறுமியைப் போன்று `பசிக்கும்ல’ என்னும் உன்னதமான கருத்தைச் சொன்ன பிரணவ்வும் செம்ம வைரல்.
பிரணவ் பற்றி உங்கள் மனதில் தோன்றும் ஒருவரி கருத்தை இங்கே பதிவு செய்யவும்!