பயணிகளின் உயிரோடு விளையாடும் சாரதிகள்
வனியா கல்குணாமடு பூவே பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் கல்குணாமடு பூவே பாலத்திற்கு அருகே சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் பஸ்ஸில் பயணித்த பயணிகள் நால்வர் காயமடைந்துள்ளனர்.
சாரதியின் நித்திரை மயக்கம் இவ் விபத்து இடம்பெற காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துடன் மேலதிக விசாரணைகளை ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முந்திச் செல்ல முற்பட்டதால் வந்த வினை: 12பேர் படுகாயம்!
முல்லைதீவு – இரட்டைவாய்க்கால் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து குடைசாய்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் 12 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைதீவு – பரந்தன் பிரதான வீதியில் இரட்டைவாய்க்கால் திருப்புமுனை பகுதியில் தனியார் பேருந்து ஒன்றை அரச பேருந்து முந்திச் செல்ல முற்பட்ட வேளை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.