சென்னை: பெரிய முதலாளி அழைத்தும் வர மறுத்துவிட்டாராம் வீரத் தமிழச்சி.
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான தமிழச்சி ஒருவர் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றார். போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை எல்லாம் பெரிய முதலாளி வீட்டில் இருந்தபோது கெடுத்துக் கொண்டார்.
அந்த நிகழ்ச்சியை பார்த்து அவரை பலரும் கழுவிக் கழுவி ஊத்தினார்கள்.
முன்னாள் போட்டியாளர்களை விருந்தினர்களாக அழைத்து வந்தார் பெரிய முதலாளி. டைட்டிலை வென்றவர் உள்பட 6 பேர் வந்து சிறப்பித்துவிட்டு போனார்கள். தமிழச்சியையும் பெரிய முதலாளி அழைத்தாராம்.
ஆனால் இனி அந்த வீட்டு பக்கமே வர மாட்டேன் என்று கறாராக கூறிவிட்டாராம் அம்மணி. இது பெரிய முதலாளிக்கே லைட்டாக ஷாக்காக இருந்ததாம்.
பெரிய முதலாளி வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் மக்கள் அந்த தமிழச்சியை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தனர். இரண்டாவது சீசன் துவங்கிய பிறகே அம்மணியை தாளிப்பது சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் அவர் மீண்டும் பெரிய முதலாளி வீட்டிற்கு வந்தால் மக்கள் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்துவிடுவார்கள் என்று பயந்து வர மறுத்துவிட்டாராம்.
விருந்தினராக சென்ற காமெடி நடிகைக்கும் எனக்கும் ஆகவே ஆகாது. இந்நிலையில் நான் மீண்டும் அந்த வீட்டிற்குள் சென்றால் எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை வந்துவிடும்.
இதை பார்த்து மக்கள் என்னை திட்டத் துவங்கிவிடுவார்கள். சொந்த செலவில் நான் சூனியம் வைத்துக் கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துவிட்டாராம் அம்மணி.
நான் தற்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்நேரத்தில் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று பெயரை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. மேலும் அந்த வீட்டிற்கு செல்ல எனக்கு நேரமும் இல்லை. நான் ரொம்ப பிசி என்று தெரிவித்தாராம் தமிழச்சி. நல்ல வேளை நீங்க வரவில்லை. வந்திருந்தால் நீங்கள் பயந்தது போன்று நிச்சயம் நடந்திருக்கும்.