அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய இன்றைய தினம் எட்டு இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச்சர்களும் பதவியேற்றனர்.
ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 18 பேர் பதவியேற்றனர்.
இராஜாங்க அமைச்சர்கள்;-
மொஹான் லால் கிரேரு – உயர்கல்வி மற்றும் கலாசார விவகார இராஜாங்க அமைச்சர்
ஏ.டி.சம்பிக்க பிரேமதாஸ – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
பாலித ரங்கே பண்டார – நீர் வழங்கள், வடிகாலமைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்
எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா – பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
ஶ்ரீயானி விஜேவிக்கிரம – மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர்
லக்ஸ்மன் செனவிரத்ன – பொதுநிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் இராஜாங்க அமைச்சர்
வீரகுமார திஸாநாயக்க – மஹாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
திலிப் வெத்தாரச்சி – மீன்பிடி, நீரியல்வளம் மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்
பிரதியமைச்சர்கள்;-
துனேஸ் கங்கந்த – காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு பிரதியமைச்சர்
எம்.எஸ்.அமீர் அலி – மீன்பிடி, நீரியல்வளம் மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர்
ரஞ்சன் ராமநாயக்க – சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர்
கருணாரத்ன பரணவிதான – விஞ்ஞானம் தொழில்நுட்பம், ஆய்வு திறன்அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலையக பாரம்பரிய பிரதியமைச்சர்
பாலித தெவரப்பெரும – நிலைத்திருக்கும் அபிவிருத்தி, வனஜீரராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதியமைச்சர்
சாரதி துஷ்மிந்த – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சர்
முத்து சிவலிங்கம் – சமூக நலன்பேணல் மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதியமைச்சர்
மனுச நாணயக்கார – தொழில்நுட்பம், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர்
எச்.எம்.எம்.ஹரீஸ் – பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சர்
அலி ஷாஹிர் மௌலானா – தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர்