பிரபல நடிகை கவீஷா அயேஷா வாகன விபத்தில் உயிரிழந்தமை தொடர்பாக தனியார் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்துள்ளவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
24 வயதான கவீஷா அயேஷானி செலுத்திய சிற்றூர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
விபத்துக்கு உள்ளான பஸ் நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் எதிர்த் திசையில் வந்த நடிகையின் கார், குறித்த பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப் படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த நடிகை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம், களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இன்று மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் வெளியான் CCTV வீடியோ..