கொழும்பு: விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளர் சு.ப.தமிழ்ச்செல் வனும், மற்றத் தலைவர்களும் துல்லியமான இலங்கை ராணுவக் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதற்கு, பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் வழங்கிய தகவல்களே காரணம் என்ற சிஐஏ அறிக்கையின் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளின் போது, சக்திவாய்ந்த இலக்குகளை தகர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் ரகசிய அறிக்கை ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்பட்ட 21 பக்கங்களைக் கொண் ட இந்த அறிக்கை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ யின், நாடுகடந்த விவகாரங்களுக்கான பிரிவினால் ‘கிளர்ச்சி முறியடிப்பில் மிகச்சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில்,(2001- ஜூன் 2009), அல்ஜீரியாவில் (1954-1962), கொலம்பியாவில் (2002-ஜூன் 2009), ஈராக்கில் (2004- ஜூன் 2009), இஸ்ரேலில் (1972 தொடக்கம்1990களின் நடுப்பகுதி, 1990களின் நடுப்பகுதி தொடக்கம், 2009 ஜூன் வரை), பெருவில் (1980-1999), வடஅயர்லாந்தில் (1969-1998) மற்றும் இலங்கையில் (1983 – மே 2009) கிளர்ச்சி முறியடிப்பில், சக்திவாய்ந்த இலக்குகள் குறிவைக்கப்பட்ட விதம் குறித்து இதில் விவரிக்கப்பட்டுள்ளன.
மேலும், செசனியா, லிபியா, தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் சிஐஏயின் இந்த ரகசிய அறிக்கையில் உதாரணம் காட்டப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கிளர்ச்சியை முறியடிக்க, இலங்கை அரசு, விடுதலைப்பு புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவருக்கு நம்பிக்கையானவர்களைக் கொலை செய்வதற்கு 1983ஆம் ஆண்டு முதல் 2009 மே வரையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்த ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை மோசமாகவும் அதேவேளையில், மிகவும் புத்திசாதுரியமான, இனத் தேசியவாத அமைப்பாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதற்கட்ட ரகசியத் தகவல்கள் கிடைத்ததையடுத்து, புலிகளின் தலைவர் பிரபாகரனையும், முக்கிய தலை வர்களையும் கொல்வதற்கு, இலங்கை அரசு தனது விமானப்படை மூலம், பதுங்கு குழிகளை அழிக்கும் குண்டு களைப் பயன்படுத்தி, 2007 நவம்பரிலும், 2008 ஜனவரியிலும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் இதில் கூறப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2007 நவம்பர் 2ஆம் தேதி விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஏனைய தலைவர்களும் துல்லியமாக இலங்கை ராணுவக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதற்கு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் வழங்கிய தகவல்களே காரணம் என்று ரகசிய அறிக்கை ஒன்று கூறுவதாகவும் சிஐஏ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தலைமை மீதான அதிருப்தியைப் பயன்படுத்தி, முரண்பாடுகளைத் தூண்டிவிட்டு, பிளவுகளை ஏற்படுத்துவ தன் மூலம், சக்திவாய்ந்த ராணுவ இலக்குகளை நெருங்கலாம் என்றும் சிஐஏயின் அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
மேலும் கேணல் கருணாவுக்கும், விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு களைத் திறமையாகப் பயன்படுத்தி, இலங்கை அரசு அடைந்த பலன்களையும் சிஐஏயின் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இச்சம்பவத்தின் பின்னணியிதுதான்….
(தமிழ் செல்வன் மீதான குண்டுவீச்சு தாக்குதல் சம்பவமானது புலிகளின் தலைவர் பிரபாகரனால் திட்டமிட்டு செய்யப்பட்ட “காட்டிக்கொடுப்பு” என்பது வன்னியில் உள்ள மக்களுக்கே நன்றாக தெரியும். ஆனால் புலம்பெயர் புலிப்பினாமிகள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புலியாதரவாளர்களை பொறுத்தவரை தலைவர் பிரபாகரன் எப்பொழுதுமே புனிதமானவர்.
1. பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் என்பவர் பிரபாகரன் சொல்வதைதான் செய்வார்.
2. பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் தமிழ்செல்வனை காட்டிக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
4. தமிழ் செல்வன் போன்ற புலி முக்கியஸ்தவர்கள் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியிலேயோ வன்னியில் வாழ்ந்தவர்கள். அவர்கள் இருக்குமிடம் புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டம்மன் போன்றோருக்கு மட்டுமே தெரிந்தவிடயமாகும்.
3. தமிழ் செல்வனை பிரபாகரன் படுகொலை செய்வதற்கு காரணம் யாதெனில்… நோர்வேயில் நடந்த சமாதான ஒப்பந்தத்தில் கருணா, அன்ரன் பாலசிங்கத்துடன் சேர்ந்து தமிழீழத்தை நிராகரித்து சமஷ்டியை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டதே பிரபாகரனுக்கும் தமிழ் செல்வனுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. அதன் விளைவே தமிழ் செல்வனின் படுகொலையாகும். தன்னையும் பிரபாகரன் குறிவைக்கிறார் என்பதை அறிந்துதான் கருணா புலிகள் இயக்கத்திலிருந்து விலகியவர்.)
4.தமிழ் செல்வன் படுகொலை செய்யப்பட்ட பொழுது…. தமிழ் செல்வன் வகித்த அரசியல் துறை பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டு சாதாரண பதவி ஒனறில் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.