பிரேசிலுக்கான கிரீஸ் தூதரை காதலுடன் இணைந்து அவரது மனைவி கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலுக்கான கிரீஸ் தூதுவரான கைரியாக்கோஸ் அமிரிடிஸ் (வயது 59), கடந்த சில தினங்களுக்கு பாலம் ஒன்றுக்கு கீழ் எரிந்து கிடந்த கார் ஒன்றினுள் கருகிய நிலையில் கிடந்ததையடுத்து புலன் விசாரணை மேற்கொண்ட பிரேசில் பொலிஸார் தூதரின் 40 வயதுடைய மனைவியைக் கைது செய்துள்ளனர்.
தூதரின் மனைவியான பிராங்கோய்ஸ், தனது கள்ளக் காதலருடன் இணைந்து மேற்படி கொலையைப் செய்திருப்பதாக பொலிஸார் சந்தேகித்தின்பேரில் நேற்று அவரை கைது செய்து 30 நாள்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, தூதரின் மனைவி பிராங்கோய்ஸுக்கும் ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் கள்ளக் காதல் இருந்து வந்ததாகவும் அதன் அடிப்படையில் அந்தக் காதலரைப் பயன்படுத்தி கணவனைத்க் தீர்த்துக் கட்டியதாகம் சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பில், குறித்த பொலிஸ் அதிகாரியின் மைத்துனர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பத்தில் கணவரைக் கொல்வதற்காக காதலருக்கும் அவரது மைத்துனருக்கும் பிராங்கோய்ஸ் 24 ஆயிரம் டொலர் பணம் கொடுத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.