புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக அவர் பதவியேற்கவுள்ளார்.
இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் பயிலுநர் கெடட் உத்தியோகத்தராக இணைந்துகொண்ட ஷவேந்திர சில்வா, இறுதிக்கட்ட யுத்தத்தின்போது 58 ஆம் படைப்பிரிவின் தளபதியாக செயற்பட்டுள்ளார்.
இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக லெப்டினன் ஜெனரல் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று ஓய்வுபெற்ற நிலையில், இன்று 23 ஆவது இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை, நடந்த நிகழ்வில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கான நியமனக் கடித்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.
இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, போர்க்குற்றங்களை இழைத்தார் என ஐ,நா மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளால், குற்றம்சாட்டப்பட்டு வருகின்ற நிலையில், அவர் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.