தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் உலகின் பல பாகங்களிலும் சிதறியுள்ளன. இது புதிய விடயமல்ல. அவர்கள் செயற்படுவதாக கூறப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரிஸ் விக்னேஸ்வரன் மீது குற்றம் சுமத்தினார். இதற்கு பதிலளிக்கும்போதே சம்பந்தன் மேற்படி கருத்துக்களை தெரிவித்தார்.
சம்பந்தன் உரையாற்றியபோது- ‘இன்றைய குழப்பகரமாக நிலைக்கு ராஜபக்சதான் பொறுப்பு கூற வேண்டும். ஐ.நா செயலாளர் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களிற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமைதான் குழப்பங்களிற்கு காரணம். இதற்கான சகல பொறுப்பையும் அப்போதைய வெளிவிவகார அமைச்சரான பீரிஸ் ஏற்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் உலகின் பல பாகங்களிலும் சிதறியுள்ளன. இது புதிய விடயமல்ல. அவர்கள் செயற்படுவதாக கூறப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை.
நாம் உங்களுடன் 18 தடவைகள் பேசினோம். ஆனால் கண்ட பலன்தான் என்ன? அனைத்துமே வீண். நீங்கள் ஒரு பொறுப்பான அரசாக நடந்தீர்களா? எமது கழத்தை அறுக்கத்தானே முயன்றீர்கள்.
சர்வதேசம் முதலில் உங்களிடம் உள்நாட்டு விசாரணையைத்தானே கோரியது. பின்னர்தானே சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட்டது.
எமது மக்களை மீள்குடியேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் உங்களிற்கு விருப்பமில்லை.
புலம்பெயர்ந்த சகலரும் பொறுப்பற்றவர்கள் என நினைக்க வேண்டாம். அவர்களில் சகலதுறைகளிலும் விற்பன்னர்கள் உள்ளனர்.