புளத்கொஹுப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபான தோட்டத்தில் நேற்று ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலையில் களுபான தோட்ட பாதையில் முச்சக்கர வண்டி விபத்து ஒன்றில் தனது மகன் சிக்கியதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இவரை இடைமறித்த சிலர் இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த அவர், கரவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் இவ்வாறு உயிரிழந்தவர் அதே தோட்டத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபராவார்.
இந்தச் சம்பவத்துடன் மூவர் தொடர்புபட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், இருவர் புளத்கொஹுப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் தலைமறைவான நிலையில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புளத்கொஹுப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை சம்பவம் நடைபெற்ற இடத்தை ருவன்வெல்ல நீதிவான் மிலன் ஜயவர்தன நேரில் சென்று பார்வையிட்டார்.
<