இதிகாச கதைகளில் ஐவரை திருமணம் புரிந்த பெண்ணுக்கும் ஒருவரை திருமணம் புரிந்த ஆயிரம் பெண்களுக்கும் கூட இந்த பிரச்சினை தோன்றவில்லை.
ஆனால் ஒருவரை மூன்று பெண்கள் திருமணம் செய்துக்கொண்டதால் இந்த பிரச்சினை தோன்றியுள்ளது.
அந்த பிரச்சினை என்வென்று யோசிக்கின்றீர்களா யார் முதல் பெண்மணி என்ற பிரச்சினைதான்…
உலக தலைவரான அமெரிக்க ஜனாதிபதியின் மனைவிகளுக்கு இடையில்தான் அந்த பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு நாட்டின் ஜனாதிபதியாக யாரேனும் தெரிவு செய்யப்பட்டால் அவரின் மனைவி நாட்டின் முதல் பெண்மணியாகவும் தெரிவுசெய்யப்படுவார்.
இது நாட்டின் சம்பிரதாயங்களில் ஒன்றாகும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மூன்று மனைவிகள் என்பதனை அனைவரும் அறிவோம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் சர்ச்சைகளும் பின்னிப் பிணைந்தவையாக அமெரிக்க அதிபராகப் போட்டியிடும்போதிலிருந்தே இருந்துவருகிறது.
ட்ரம்ப் தற்போது தன்னுடைய மூன்றாவது மனைவி மெலானியாவுடன் வெள்ளை மாளிகையில் வசித்துவருகிறார்.
இந்நிலையில், ட்ரம்பின் முதல் மனைவி இவானா, ‘ரைசிங் ட்ரம்ப்’ (Raising Trump) என்ற புத்தகத்தில், தன்னுடைய மூன்று குழந்தைகள் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகம் குறித்த அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் வெள்ளை மாளிகைக்குத் தொடர்புகொள்ள நேரடி தொலைபேசி எண் இருப்பதாகவும், ஆனால், அங்கு மெலானியா இருப்பதால் அவர்களுக்குள் எந்தப் பொறாமை உணர்வையும் சர்ச்சையையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும், ஏனெனில் தான் ட்ரம்ப்பின் முதல் மனைவி என்றும் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி என்றும் குறிப்பிட்டு இருந்தார்.