மும்பையை சேர்ந்தவர் ஹமிது நேஹல் அன்சாரி (33). இவர் கடந்த 2012ம் ஆண்டு பேஸ்புக்கில் அறிமுகமான ஒரு பெண்ணுடன் தினமும் சேட் செய்து வந்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கரக் நகரை சேர்ந்த அந்த பெண்ணும் அன்சாரியும் சேட் செய்யும் நேரம் தினமும் கூடிக்கொண்டே போனது அவர்கள் ஒரு கட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் காதல் பேஸ்புக்கிலேயே வளர்ந்து கொண்டிருந்தது. இதுவரை இருவரும் நேரில் ஒருமுறை கூட சந்தித்தது. இல்லை.
இந்நிலையில் திடீர் என பாக்.இகை சேர்ந்த அந்த பெண் பேஸ்புக்கில் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் அன்சாரி சோகத்தில் முழ்கினார். விரைவில் அவர் பேசுவார் என எதிர்பார்த்த அன்சாரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால் எப்படியாவது பாக்.,சென்ற அவரை நேரில் சந்தித்து பேச வேண்டும் என அன்சாரி விரும்பினார்.
இதனால் 2012ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் வழியாக அன்சாரி பாக்., சென்று அங்கு கரக் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் ரூம் எடுத்த தங்கினார்.
அப்பொழுது அவரிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவரை பாக்., உளவு போலீசார் கைது செய்தனர்.
போதிய ஆவணங்கள் இல்லாமல் நுழைந்தது. உளவு பார்ப்பது, சமூக விரோ செயல்களில் ஈடுபட முயல்வது போன்ற வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை பாக்., ராணுவ நீதிமன்றம் விசாரித்தது.
சுமார் 3 ஆண்டுகள் நடந்த வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே 2012 முதல் தீர்ப்பு வரும் வரை 3 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்ததால் அடுத்த 3 ஆண்டுகள் அவர் சிறையில் இருக்க வேண்டிய நிலை வந்தது.
இந்நிலையில் அவரது தண்டனை காலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. இவரது தண்டனை காலம் முடிந்தாலும் இவரை விடுதலை செய்ய முடியாது என பாக். அரசு முதலில் சொன்னது.
அவர் ஆவணங்கள் சமர்பிக்காததால் வெளியில் விட முடியாது என கூறியது. அதை எதிர்த்து பெஷாவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஆக., மாதம் தீர்ப்பு வந்தது. இதில் அவரை தண்டனை காலம் முடிந்ததும் இந்திய அதிகாரிகளிடம் அவரை ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஹமித் நிஹால் அன்சாரி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை இந்திய அதிகாரிகளிடம ஒப்படைக்கும் நடைமுறைகள் நடந்து வருவதாக பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்துள்ளார்.