திருச்சியில் பெண்ணின் கைப்பயை பறிக்க முயன்ற கொள்ளையர்கள், அப்பெண்ணை சாலையில் தரதரவென்று இழுத்துச்சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் துறையூரில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.90 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றார்.
அப்போது கிருஷ்ணவேனி பையில் பணம் கொண்டு செல்வதை எப்படியோ? கொள்ளையர்கள் அறிந்துள்ளனர். இதனால் அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்களும் பணப்பையைப் பறித்தனர்.
ஆனால் பையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் கிருஷ்ணவேணி. இதனால் பல மீட்டர் தூரத்துக்கு அவரை கொள்ளையர்கள் தரதரவென இழுத்துச் சென்றனர்.
அப்போது அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டதால் கிருஷ்ணவேணியை விட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அது வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.