தனது மகனின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத தாயொருவர் மகனின் இறுதிகிரியைகளின் போது மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று அநுராதபுரம் சாலியவெவ, மான்கடவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றில் முகாமைத்துவ மட்டத்தில் பணியாற்றிவந்த பிரியங்கர பிரியதர்ஷன (33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
தனது ஆறு பிள்ளைகளில் ஐந்தாவது மகனின் மரணத்தினால் மனமுடைந்து போயிருந்து அவரது தாய் ஹேமாகமகே தயா மாலனி (60) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மகனின் அகால மரணத்தின் அதிர்ச்சியினால் கடுமையாக பீடிக்கப்பட்டிருந்த தாய், மகனின் பூதவுடலுக்கு அருகில் இருந்துகொண்டு “நான் இனிமேல் வாழ்வதில் பயனில்லை, நானும் உன்னுடனே வந்துவிடுகிறேன்” என அழுது புலம்பிக் கொண்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் நபரின் இறுதிகிரியைகள் வீட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன்போது அந்நபரின் தாயும் அந்நிகழ்வில் கண்ணீர்மல்க கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில், மகனின் பிரிவை தாங்கிக்கொள்முடியாமல் அவர் திடீரென அவ்விடத்திலேயே மயங்கி வீழந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை தூக்கியெடுத்து முகத்துக்கு தண்ணீர் தெளித்தபோதும் அவர் எழுந்திராத காரணத்தினால் மரண நிகழ்வில் கல்ந்து கொண்டிருந்த வைத்தியரொருவர் மயக்கமடைந்த தாயின் நாடித்துடிப்பை பரிசோதித்துவிட்டு அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளார்.
அதனையடுத்து, அங்கிருந்த அவரது உறவினர்கள் அவரை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, தனது சகோதரனின் பிரிவினால் மீளாத்துயரில் இருக்கும்போது, தாயும் உயிரிழந்துவிட்ட செய்தியை கேள்வியுற்ற, உயிரிழந்த பெண்ணின் மகன்மார் இருவரும் மகள் ஒருவர் கடும் மன உளைச் சலுக்குள்ளாகியதனையடுத்து அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட் டதாக வைத்தியசாலையில் வட்டா ரங்கள் தெரிவிக்கின்றனர்.