மலேசியாவிலுள்ள மசூதி ஒன்றிற்கு சுற்றுலா செல்வதற்கு அந்த மசூதி தடை விதித்துள்ளது.
Borneo தீவின் Kota Kinabalu விலுள்ள ஒரு மசூதிக்கு முன் அமைந்திருக்கும் குட்டையான சுவர் மீது ஏறி இரண்டு இளம்பெண்கள் கவர்ச்சியான உடையில் கவர்ச்சி நடனம் ஆடினார்.
இதனால் தனது அழகுக்காக பலரைக் கவர்ந்த அந்த மசூதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்வது தற்போது மொத்தமாக தடை செய்யப்பட்டுளது.
உள்ளூர் வாசிகளும் இஸ்லாமியர்களும் அந்தப் பெண்களின் ஆபாச அசைவுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களது நடனம் கண்டு ஆத்திரமுற்ற ஒருவர், அந்தப் பெண்கள் சுவர் மீதிருந்து விழுந்து தொலைக்கக்கூடாதா? என்று கத்தினார்.
அவர்கள் செய்வது எவ்வளவு தவறு என்பதை அந்தப் பெண்கள் தெரியாமல் செய்ததால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என மாகாண சுற்றுலாத்துறை அமைச்சரான Christina Liew தெரிவித்துள்ளார்.