பல்வலியால் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் தனது தாயுடன் பல் பிடுங்குவதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை காலை வேளையில் சென்றுள்ளார்.
அப்போது குறித்த யுவதி வலியால் அழ, தாய் உள்ளே செல்லமுடியாது என கூறியதை அடுத்து தாய் வெளியே நின்றுள்ளார்.
வலியால் அழுத அந்த பெண்ணிற்கு கடமையில் இருந்த பெண் வைத்தியர் கன்னத்தில் அறைந்துள்ளார் .
இதை பின்பு அழுதவாறு தாயிடம் குறித்த பெண் நோயாளி கூறியுள்ளார். இது தொடர்பில் தாய் கூறுகையில்,
நாங்கள் கிராமத்திலிருந்து வருகிறோம் , இங்கே ஒழுங்கான முறையில் சிகிச்சை பெற்றுகொள்வதற்காக தான் இவ்வளவு தூரம் வந்தோம்.
இவர்கள் இப்படி செய்துவிட்டார்கள். இதை நாம் யாரிடம் கேட்பது என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை. என கவலையுடன் தெரிவித்தார்.
குறித்த நோயாளியிடம் கேட்டபோது தான் வலி தாங்க முடியாமல் அழ வைத்தியர் தனது கன்னத்தில் அறைந்ததை கூறினார் .