மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் விடிஷா மாவட்டத்தில் ஒரு இளம்பெண் தனது தலைப்பிரசவத்தில் 2 தலைகள், 3 கைகளுடன் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம், விடிஷா மாவட்டத்தில் உள்ள சுஜா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்வந்த் ஆஹிர்வார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
நிறைமாத கர்ப்பிணியான இவரது மனைவி சமீபத்தில் பிரசவத்துக்காக விடிஷா மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை பபிதா ஒரு 3.3 கிலோ எடையில் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்.
2 தலைகள், 3 கைகள் மற்றும் அந்த 3 கைகளில் 4 உள்ளங்கைகளுடன் பிறந்த குழந்தையை கண்டு ஆச்சரியப்பட்ட டாக்டர்கள் உடனடியாக அதை தீவிர சிகிச்சை கண்காணிப்பு பகுதியில் அனுமதித்தனர்.
தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக போபாலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்றைய நிலவரப்படி அந்த குழந்தையின் உடல்நிலை நலமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.