தனது மனைவியின் சங்கிலியைக் களவெடுத்து தனது வீட்டுக்கு அருகில் உள்ள பல்கலைக்கழக மாணவிக்கு கொடுத்த கணவன் மீது போர் தொடுத்துள்ளார் மனைவி. குறித்த சண்டை தற்போது யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையம் வரை செல்லவுள்ளது.
இரவு கழுத்தில் போட்டிருந்த சங்கிலி காலையில் எழும் போது காணவில்லை என பல இடங்களிலும் மனைவி பல நாட்களாக தேடி வந்துள்ளார். மனைவியின் சங்கிலியை கணவன் மற்றும் மனைவியின் சகோதரங்களும் தொடர்ந்து தேடி வந்துள்ளனர்.
இந் நிலையில் அயல் வீட்டில் வசிக்கும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் சுற்றுலா செல்வதற்காக தனது தாயாரிடம் பணம் கேட்ட போது தாயார் கொடுக்க மறுத்துள்ளார்.
பின்னர் மாணவி தனக்கு பணம் கிடைத்துவிட்டதாக தெரிவித்து சுற்றுலாவுக்கு செல்ல முற்பட்ட போது பணம் கிடைத்த விதம் குறித்து தாயார் அச்சுறுத்தி கேட்டுள்ளார்.
அப்போது சங்கிலி ஒன்றை யாழ் நகரப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக மாணவி தெரிவித்துள்ளார்.
குறித்த சங்கிலி யாருடையது என கேட்டு மாணவியை தாயார் அச்சுறுத்திய போதே சங்கிலி கொடுத்தவர் பக்கத்துவீட்டு குடும்பஸ்தர் என மாணவி தெரிவித்துள்ளார்.
தாயார் அடுத்த நாளே சங்கிலியை அடகு மீட்டு வந்து குடும்பஸ்தர் வீட்டில் கொடுத்த போது குடும்பஸ்தர் செய்த திருவிளையாடல் மனைவிக்கு தெரியவந்து பெரும் சண்டை மூண்டுள்ளது.
பக்கத்து வீட்டு பல்கலைக்கழக மாணவியும் மனைவியால் வீடு புகுந்து தாக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. தற்போது இச் சண்டை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாட்டுக்காக இன்று செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.