சைக்கிள்களை பாதுகாப்பதற்கு அவற்றிற்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட பூட்டுக்களை பயன்படுத்துவார்கள். அப்படி இருந்தும் தூக்கிச் சென்று பூட்டை உடைப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இந்த சூட்சுமத்தை உணர்ந்த நபர் ஒருவர் தனது சைக்கிளை மரத்துடன் இணைத்து பூட்டு போட்டுள்ளார்.
இதன்போது அவ் வழியால் ஸ்கூட்டரில் வந்த திருடன் அந்த சைக்கிளை திருட எண்ணியுள்ளான்சிறிது நேரத்தில் செயலில் இறங்கிய அத்திருடன் மரத்தை வெட்டி வீழ்த்தி குறித்த சைக்கிளை தனது ஸ்கூட்டரில் தூக்கி வைத்துக்கொண்டு ஹாயாக சென்றுள்ளான். இச்சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.