அண்மையில், ஜெர்மனியில் வாழும் ‘கச்சாய் சிவம்’ என்பவர் ‘மலையக தமிழ் மக்களை படுமோசமாக இழிவுபடுத்தி பேசிய வீடியோ பதிவு ஒன்று பேஸ்புக்கில் வெளிவந்து உலகத் தமிழர்களின் கடும் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகியது யாவரும் அறிந்ததே.
இந்த வீடியோ பதிவு வெளிவரமுன்பே, மலையக தமிழ் மக்களை ‘’தோட்டக்காட்டான்’’ என இழிவுபடுத்தி பா.உ.சிறிதரன் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளிவந்து மலையக மக்களினதும், உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழர்களின் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது.
மலையக தமிழ் மக்களை ‘தோட்டக்காட்டான்’ என இழிவு படுத்தி பேசி ‘கச்சாய் சிவம்’ போன்றவர்களை தூண்டிவிட்டதே தமிழ்த் தேசிய பா. உ. சிறிதரன் போன்றவர்களே. கச்சாய் சிவம் என்ற மனநோயாளி, கிளிநொச்சி பா.உ. சிறிதரனின் உறவினர் என்று சொல்லப்படுகின்றது.
நிலைமை இவ்வாறு இருக்க…
05-08-2017 அன்று யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தினுடைய 13 ஆவது சர்வதேச மகாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவா்கள்….,
பேஸ்புக்கில் மலையக தமிழ் மக்களை இழிவு படுத்தி பேசி, மலையக மக்களின் மனங்களை புன்படுத்திய முகம்தெரியாத பேஸ்புக் நபரை கண்டித்தும், அதற்கு தாங்கள் தக்க பதில் சொல்வோம் எனவும் பேசியுள்ளார்.
ஆனால், தமிழரசுக்கட்சி உறுப்பினரும், பா.உறுபினருமான சிறிதரன் ‘’தோட்டகாட்டான்’’ என மலையக தமிழ் மக்களை இழிவு படுத்தி பேசியது சம்பந்தமாக தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற வகையில் எந்தவிதமான கண்டனத்தையோ, மனவருத்தத்தையோ மாவை சேனாதிராஜா இதுவரை தெரிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது.
சாதாரண முகம் தெரியாத ஒருவன் பேசியது மலையக தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியது என்றால், தமிழ் மக்களை பிரதிநித்துவப் படுத்தும் அரசியல்வாதி ஒருவர் மலையக தமிழ் மக்களை ”தோட்டக்காட்டான்” என இழிவு படுத்தி பேசியது அம் மக்களின் மனங்களை புண்படுத்தியிருக்காதா??
என்னசார் இது??
உங்களுக்கு ஒரு நியாயம்? மற்றவர்களுக்கு ஒரு நியாயமா??
இடங்களுக்கு, சந்தர்பங்களுக்கு ஏற்றமாதிரியும் பேசி என்னமா அரசியல் செய்கிறார்கள்!!
சிறிதரனும் இம் மகாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.
தொடர்புடைய செய்தி..
மலையகத் தமிழரை பிரிக்கும் யாழ் சைவ வேளாள மேலாதிக்கவாதிகள்!!