மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நடைபெறவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை திட்டமிட்டு குழப்பிய பெண்மணி யார் என்று தெரிந்தது.
இதோ… அனந்தியுடன் நிற்கும் பெண்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சம்பந்தனுக்கு எதிராக குரல் எழுப்பியவர். இந்தச் செயலானது அனந்தியால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது
(முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப வந்த பெண்மணியின் பேச்சை முதலில் கேளுங்கள்)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை பல்வேறு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தங்கள் தங்கள் சுயநலவாத அரசியல்தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள்.
அதேபோன்று, இந்த பெண்ணும் இந்நிகழ்வை பயன்படுத்தி புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழர்களிடையே “வீரத்தமிழிச்சி” பட்டம் வாங்கியுள்ளார்.
இது எரிந்த தேசமாமாம், ஒருத்தரும் உரையாற்றக்கூடாது, அஞ்சலி மட்டும்தான் செலுத்தவேண்டும் என இந்த நவநாகரீகமாக வந்த பெண் சொல்லுகிறார்.
இப்படி சொல்லுவதற்கும், கட்டளையிடுவதற்கும் இவா் யார்??
இந்த பெண்ணின் நடையுடை, பாவனையில் எரிந்த தேசத்தில் வாழ்ந்த, வாழுகின்ற அல்லது முள்ளிவாய்கால் பேரவலத்தில் உறவுகளை இழந்த பெண்போல் தெரியவில்லையே??
வெளிநாட்டிலிருந்து ஊர்சுற்ற வந்த ஆள்மாதிரிதான் தெரிகின்றது.
ஊர்சுற்ற வந்த இடத்தில் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களுக்கு எதிராக அரசியல் செய்யும் அரிசியல்வாதிகளால் (கஜேந்திர குமார் பொன்னம்பலம், அனந்தி சசிதரன்…) அனுப்பபட்ட பெண்ணாகத்தான் கட்டாயமாக இருக்கவேண்டும். (இவர் யார்? இவரின் பின்னணி என்ன என்பதுபற்றி விசாரிக்கப்படவேண்டும்)
தவிர, சம்பந்தன் பேசும்போது திட்டமிட்ட வகையில், சம்பந்தனுக்கு பின்னால் ஊடகவியலாளர் என்ற போர்வையில் நின்ற தயாபரன் என்பவர் , தீடீரென “நீங்கள் பயங்கரவாதத்தை ஒழித்த அரசுக்கு நன்றி தெரிவித்து பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கின்றீர்கள். அதற்கு என்ன பதில் சொல்கின்றீர்கள் என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.”
மேற்படி ஊடகவியலாளர் தயாபரன் அவர்கள் கேட்ட கேள்வி சரியா? இல்லையா? என்பதுக்கு அப்பால், இதனைக் கேட்கும் இடம் அதுவா?? என்பதே பொதுவான ஆதங்கம்.. அதையும் தாண்டி இவர் (ஊடகவியலாளர் தயாபரன்) அவ்விடத்தில் இந்தக் கேள்வியை முன்வைத்ததே, இந்த நிகழ்வைக் குழப்ப வேண்டுமெனும் காரணம் தான் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இது திட்டமிட்டவகையில் சம்பந்தனை தர்மசங்கடத்துக்கு உட்படுத்தி குளிர்காய நினைக்கும் அரசியல் சக்திகளின் செயல்பாடாகும்.
மேற்படி ஊடகவியலாளர் தயாபரனின் கேள்விக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதில் கூறும்போது ஏற்க்கனவே EPRLF செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வவுனியாவிலிருந்து வந்திருந்த நபர்கள் ஒருசிலர் கூச்சலிட ஆரம்பித்ததும், அவர்களுக்கு பக்கத்துணையாக அவர்களுடனேயே, அவர் காணப்பட்டதும் எல்லோருக்கும் தெரிந்ததே.
அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, “மக்கள்” எனும் போர்வையில் குழப்பியவர்கள் சுயநல அரசியல்வாதிகளால் தூண்டி விடப்பட்டவர்கள் எனவும், அவர்கள் உண்மையான நினைவேந்தல் செய்ய வந்த “பொதுமக்கள்” அல்ல என்பது, அவர்களது பேச்சுக்களிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிய வருகிறது.
இது மட்டுமல்லாது, EPRLF தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்களது “பிரத்தியேக செய்தியாளராக” இருக்கும் “சிவ கரன்” என்பவர் தனது முகநூல் மூலம் இந்த குழப்பத்தை பெரிதுபடுத்தி விளம்பரம் செய்வதன் மூலமே, இந்த நிகழ்வுகளின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
ஒருவர் அல்லது இருவர் சம்பந்தனுக்கு எதிராக குரல் எழுப்பினால், தமிழ் மக்கள் அனைவரும் சம்பந்தனுக்கு எதிராக எதிர்ப்பில் ஈடுப்பட்டனர் என இணையத் தளங்களில் செய்தி போடுகிறார்கள்.
எவ்வளவோ உணர்வுபூர்வமாக நடைபெறவேண்டிய இந் நிகழ்வை ஒருசில சுயநலவாதா அரசியல்வாதிகளினதும், இவ்வாறான செயல்களை செய்வதன் மூலம் தங்களை பிரபல்யபடுத்த முனைந்தவர்களின் செயல்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது தமிழர்களின் ஒற்றுமையின்மையையும், நகைப்புகிடமான ஒரு நிகழ்வாக முடிந்துள்ளது.
– கிளிநொச்சியிலிருந்து சதாசிவம்-
சம்பந்தனுக்கு எதிராக காணொளியில் கருத்துக்கூறியவர்கள் இருவரும் கழுத்தில் கருப்பு பட்டியணிந்திருக்கிறார்கள் பாருங்கள். இவர்களை இதற்காகவே பயிற்சியளித்து அனுப்பியுள்ளார்கள். இவர்கள் ஒரு குழுவாக வந்துள்ளார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
முள்ளிவாய்கால் பேரவலம் நடந்தபோது, இங்கே நின்று விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் அரசியல்வாதிகள் இந்தியாவிலும், கொழும்பிலும் பாதுகாப்பாக இருந்தவர்கள். இவர்கள் இப்பொழுது இங்கே வந்து இறந்தவர்களுக்காக விளக்கேற்றி, அஞ்சலி செலுத்துவதற்கு என்ன உரிமை உண்டு என்பது கேட்கப்படவேண்டிய கேள்விதான்.
இந்த பெண் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தவா?? அல்லது கலியாணவீட்டுக்கு வெளிகிட்டு வந்தவாபோல் தெரிகிறதே?
தனக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆசனம் வழங்கவில்லை என்ற கோபத்தில், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களின், வலது கையாக செயல்படும் திருமதி லலிதா கந்தையா அவர்கள், மேற்படி நினைவேந்தலை குழப்பும் வகையில் கூச்சலிட்டு சண்டித்தனம் செய்ததுடன், “அரசியல்வாதிகளுக்கு கைநீட்டுவோம், (அதாவது சம்பந்தன், சுமந்திரனுக்கு அடிப்போம்)” என விரல்நீட்டி, வாய்ச்சவடால் விட்டதையும், அதனை ஆனந்தி, சிவாஜிலிங்கம் போன்ற வடமாகாண சபை உறுப்பினர்கள் சிரித்தபடியே ரசித்ததும் கண்கூடு.
*யார் இந்த பெண்?? திருமதி லலிதா கந்தையா
24.ஏப்ரல்.1979 இல் பிறந்த திருமதி லலிதா கந்தையா எனும் இவர், சிறுவயதில் புலிகளின் செஞ்சோலை இல்லத்தில் வளர்ந்ததாகக் கூறிக் கொள்ளும் இவர், தன்னை இப்போது “பெண்ணுரிமைவாதி” எனக் கூறிக் கொள்வதில் தற்பெருமை கொள்பவர்.
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் வலதுகரமாக செயல்படும் இவர், தனது சொந்த குடும்ப வாழ்வில் பின்னடைவைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது யாழ். கந்தர்மடத்தில் முன்பள்ளி ஒன்றை நடத்தி வருபவர் எனவும், எப்போதும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களின், வலது கையாக செயல்படும் திருமதி லலிதா கந்தையா அவர்கள்,
இவரை மட்டுமல்ல, இன்னும் சில இளைஞர்களையும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களே, அங்கு அழைத்து வந்ததுடன், தான் கூட்டி வந்தவர்களுக்கு கண்ணசைக்க, அவர்களும் தங்கள் பங்கிற்கு குழப்பினார்கள்.
இதுக்கு மறைமுகமாக வடமாகாணசபை உறுப்பினர் ஆனந்தி அவர்களின் நண்பர், வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் துணை போனதாகவும் தெரிய வருகிறது.
இது மட்டுமல்லாது, EPRLF தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்களது “பிரத்தியேக செய்தியாளராக” இருக்கும் “சிவ கரன்” என்பவர் தனது முகநூல் மூலம் இந்த குழப்பத்தை பெரிதுபடுத்தி விளம்பரம் செய்வதன் மூலமே, இந்த நிகழ்வுகளின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
2009 இல் எம்மக்கள் கொத்துக் கொத்தாக, படுகொலை செய்யப்பட்ட நினைவு தினத்தை, கடந்த இரண்டு வருடங்களாகவே இலங்கையில் பகிரங்கத்தில் நினைவு கூற முடிகின்றது. இதுக்கு ஏதோ ஒருவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னின்று உழைத்து உள்ளது என்றால் மிகையாகாது.
ஆயினும் “தமிழ் தேசியக் கூட்டமைப்பில்” உள்ள கையாலாகாதவர்கள் சிலர், தங்களின் பிரச்சினைகளை, இந்த உன்னத நிகழ்வுகளைக் குழப்புவதன் மூலம், கேவலப்படுத்திக் கொச்சைப்படுத்துவது மிகவும் கேவலமான செயல் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
எது எப்படியிருப்பினும் “வலிசுமந்த எம் இனத்தின், தியாகத்தின் மேல் நின்று சவாரி செய்ய, யார் நினைத்தாலும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்”. அது சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆனந்தி சசிதரன் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் தகுந்த தண்டனை, மக்களால் வழங்கப்படும்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பிய பெண் யார் என்று தெரிந்தது.
இதோ… அனந்தியுடன் நிற்கும் பெண்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சம்பந்தனுக்கு எதிராக குரல் எழுப்பியவர். இந்தச் செயலானது அனந்தியால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.
முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வில் அஞ்சலி செலுத்தவந்தவர்களைவிட அதை குழப்புவதற்காக வந்த ஆட்கள்தான் கூட.
இக்காணொளியில் காணப்படுபவர்கள் கஜேந்திரகுமார் பொனம்பலத்தின் ஆட்கள்.