உண்மை தெரியாமல் ஊதிப் பெருப்பித்த ஊடகங்கள், சிறப்பு அறிக்கை இதோ!
நல்லுாரில் நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக் காரணம் தற்செயலாக நடந்ததாக இருக்கலாம் என நம்பத் தகுத்தந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நல்லுார் பின் வீதியில் உள்ள பழக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கும் அவரது உறவினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக உருவெடுத்துள்ளது.
அப்போது மோட்டார் சைக்கிளில் அவ்வழியால் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை வழி மறித்த கலகக் காரர் அவரது துப்பாக்கியைப் பறித்து குறித்த கடை வைத்திருப்பவரை சுடுவதற்கு முயன்ற போது ஏற்பட்ட கலவரமே பொலிஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காரணமாக இருந்துள்ளது.
இதன்போதே குறிப்பிட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது அப்பகுதியில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பலர் தெரிவித்துள்ளனர்.
சில வேளை நீதிபதியவர்களை வழி மறித்து சுட்டுக் கொல்வதற்காக திட்டமிட்டு குறித்த கலவரத்தை மேற் கொண்டிருந்தால் துப்பாக்கிதாரி பொலிசாரின் துப்பாக்கியைப் பறிக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.
துப்பாக்கிதாரி தயாராகவே துப்பாக்கியைக் கொண்டு வந்திருப்பான் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் துப்பாக்கி தாரியால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கான துப்பாக்கி பொலிசாரிடம் இருந்தே பறிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இச்சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.
நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை ஓட்டிய சாரதியின் தகவல்கள் இதோ..
எமக்கு முன்னால் மெய்பாதுகாவலரான கேமசந்திர (வயது 51 ) மோட்டார் வண்டியில் பாதுகாப்பிற்காக சென்று கொண்டிருந்தார், வண்டியினுள் நானும் ஐயாவும் மற்றய பாதுகாவலரான விமலசிறி ( வயது 51) இருந்தோம்.
நல்லூர் பின்வீதியை ஆண்மித்த வேளை எமக்கு முன் சென்ற கேமசந்திர உடன் ஒருவர் முரண்படுவது போல தோன்றியது.
இதை அவதானித்த ஐயா வண்டியை நிறுத்துமாறு கட்டளையிட்டார். நானும் ஓரமாக வண்டியை நிறுத்த முதல் கேமசந்திர உடன் முரண்பட்டவர் அவரது துப்பாக்கியை பறித்து முதுகு வயிற்று பக்கமாக சுட்டார்.
இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
வண்டியை நான் நிறுத்துவதற்குள் அருகிலிருந்த பொலிசாரும் ஐயாவும் அவனை நோக்கி ஓடினர்.இதன்போது விமலசிறி அவன்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.அவன் பதிலுக்கு சுட்டதில் வீமலசிறிக்கு கையில் சூடு பட்டது.
விபரீதத்தை உணர்ந்த நான் உடனடியாக ஐயாவின் உதவியோடு காயம்பட்ட இருவரையும் தூக்கி வண்டியில் போட்டு வைத்தியசாலை வந்தேன்.வரும்போது அவன் துப்பாக்கியை எறிந்துவிட்டு நொண்டி நொண்டி போவதை அவதானித்தேன் என்றார்,
அதையே நீதிபதி இளஞ்செழியனும் குறிப்பிட்டுள்ளார்.
இதோ அவர் கூறிய தகவல்.
இதே வேளை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவன் மது போதையில் இருந்ததாகவும் அவன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அப்பகுதியால் வந்து கொண்டிருந்த வயோதிப தம்பதிகளின் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு அதில் தப்பி ஓடியதாகவும் அப்பகுதியில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்மையில் நடந்தது இதுதான் என பொலிசார் உத்தியோக பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளனர் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அறிக்கை விட்டுள்ளார்.
இதேவேளை யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரும் இவ்விடயம் தொடர்பாக வீடியோஅறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த அறிக்கை.
மதுபோதையில் வீட்டிலும் மரக்காலையிலும் சண்டை பிடித்த முன்னாள் போராளி ஒருவர் எல்லாரும் பொறுங்கோ செய்கிறன் வேலை என்று சொல்லி வீதியில் அடாவடி செய்த போது.
தட்டிக்கேட்ட நீதிபதியின் பாதுகாப்பு பொலிசின் துப்பாக்கியை பறித்து அந்த போலீசாரை வயிற்றில் சுட்ட பின்னர் வீதியிலும் சகட்டு மேனிக்கு சுட்ட பின்னர் வழிப்போக்கரின் மோட்டர் சைக்கிளை பறித்துக் கொண்டு சென்றுள்ளார் இது தான் அங்கு நடந்தது.
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றவரின் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.பொலிசாரினால் கைப்பற்றப் பட்டுள்ள மோட்டார் சைக்கிள் இதுதான்.
குறித்த மோட்டார் சைக்கிளை யாழ். அரியாலை பகுதியில் வைத்து இன்று காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது நல்லூர் பகுதியில் வைத்து நேற்று மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் லிங்கம் கூல் பார் வழியாக தப்பிச் சென்றிருந்தார்.
மோட்டார் சைக்கிளைப் பறித்துத் தப்பிச் செல்லும் போது அங்குள்ள cctv கமராவில் பதிவான காட்சி.
இந்த நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் அரியாலை பகுதியில் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.எனினும், நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபராக கருதப்படும் புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளி ஒருவரின் நண்பர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூடுபட்ட போலீசார் இறந்துவிட்டார் அவரது பூதவுடல் இன்று யாழ் பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் வைத்து பொலிசாரும் பொது மக்களும் மரியாதை செலுத்திய பின் அவரது பூதவுடல் குடும்பத்தினரிடம் கையளிக்கப் பட்டது.
அதிரும் நல்லுார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்தது இதுதான்,