யாழ்ப்பாணம், புங்குடுதீவு பிரதேசத்தில் சுமார் 300 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது.
புங்குடுதீவு கடற்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்துகிடமான மீன்பிடி படகொன்று, இன்று அதிகாலை ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, அப்படகை சோதனையிட்டபோது அதிலிருந்து 300 கிலோ கேரள கஞ்சாவை மீட்டதுடன் படகிலிருந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலுக்கமைய, மேலும் இரு சந்தேகநபர்கள், யாழ். சங்குப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகம் தெரிவித்ததுள்ளது.