யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று ஆரம்பமாகி, இன்றும் இடம்பெற்று வருகிறது. யாழ். பல்கலைக்கழக வேந்தர் சி.பத்மநாதன் தலைமையில் நேற்றுக்காலை 9 மணியளவில் முதல் அமர்வாக படடமளிப்பு விழா இடம்பெற்றது.
இதையடுத்து நேற்று நான்கு அமர்வுகள் இடம்பெற்ற பட்டமளிப்பு விழா இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. இன்றும் நான்கு அமர்வுகளாக பட்டங்கள் அளிக்கப்படுகின்றன.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2151 மாணவர்கள் பட்டங்களைப் பெறுகின்றனர்.