ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் வீட்டிலிருந்த 60 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் உள்ள தமது வீட்டிலிருந்த 60 இலட்சம் ரூபா பணமே காணாமல் போயுள்ளதாக நேற்றிரவு (28) ரவூப் ஹக்கீமின் மனைவி சானாஸ் ஹக்கீம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
இந்நிலையில், கொழும்பு மத்திய பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்ஸாவின் ஆலோசனைக்கு அமைய கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கீழ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ரவூப் ஹக்கீமின் வீட்டின் பணியாளர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ள பொலிஸார் , காணாமல் போனதாக கூறப்படும் பணத் தொகையை கண்டுபிடிக்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.