நல்லூர் கந்தசுவாமி ஆலய நடந்து முடிந்த வருடாந்தப் பெருந்திருவிழாவின் போது யாழ்ப்பாண மாநகர சபைக்கு ஒரு கோடியே 92 லட்சத்து 70ஆயிரம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.
தற்காலிக கடைகள், துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையங்கள், விளம்பர பதாதைகள், சித்த மருத்துவ மருந்து விற்பனை, சஞ்சிகை விற்பனை, கழிவகற்றல் வருமானம் மற்றும் நன்கொடை மூலம் மாநகர சபைக்குக் கிடைக்கப் பெற்ற மொத்த வருமானம் வரிகள் உட்பட ஒரு கோடியே 92 லட்சத்து 70ஆயிரத்து 675 ரூபா 53 சதமாகும்.
உற்சவத்தின் போது வழங்கு பொருள்கள், பயன்பாட்டுச் சேவைகளுக்கான கொடுப்பனவு, மேலதிக வேலைக்கான கொடுப்பனவு மற்றும் விளம்பரச் செலவுகள் உட்பட மொத்தமாக ரூபா 75 லட்சத்து 57 ஆயிரத்து 358 ரூபா 75 சதம் செலவு செய்யப்பட்டது.
செலவிலும் கூடிய வருமானமாக ஒரு கோடியே 17 லட்சத்து 13 ஆயிரத்து 358 ரூபா 75 சதம் கிடைத்துள்ளது. சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது வருமானமானது 29.45 வீதத்தால் அதிகரித்திருப்பதோடு, செலவினமும் 28.19 வீதத்தால் அதிகரித்துள்ளது என்றார்.