படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் 7 வருடங்களின் பின்னர் இன்று முற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
பொரளை பொது மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள அவரது சடலத்தை மீண்டும் தோண்டி எடுக்க கடந்த 22ம் திகதி கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.
இதன்படி அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்க கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(இலங்கையின் (26-09-2016)இன்றைய செய்திகள் -லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் உள்ளடக்கம்)