வங்கதேசத்தில் உள்ள Mandi பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களும் அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழங்கத்தை பராம்பரியமாக பின்பற்ற வருகின்றனர்.
இந்த திருமண முறையால் பாதிக்கப்பட்ட Orola Dalbot (30) என்ற பெண் கூறியதாவது, நான் எனது தாய் Mittamoni மற்றும் எனது தாயின் இரண்டாவது கணவரும், எனது வளர்ப்பு தந்தையுமான Noten- ஆகிய இருவருடன் சிறு வயதில் இருந்து வசித்து வருகிறேன்.
எனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார், அவரின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படி ஒரு கணவர் கிடைத்ததால் எனது தாய் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர் என்று கூட நான் நினைத்திருக்கிறேன்.
என்னை திருமணம் செய்துகொள்ளப்போகிறவர் எனது வளர்ப்பு தந்தை போன்றே இருக்க வேண்டும் என நான் எதிர்பார்த்தது உண்டு.
ஆனால் நான் பருவம் அடைந்தபோது எனது காதில் விழந்த அந்த செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வளர்ப்பு தந்தையுடன், எனக்கு 3 வயது இருக்கும்போதே எனக்கு திருமணம் முடிந்துவிட்டது என தாய் என்னிடம் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
இதனால் வீட்டை விட்டு ஓடிவிடலாமா என்று தோன்றியது. ஆனால், எனது தாய் இதற்கு அனுமதிக்கவில்லை. தற்போது எனது தாய்க்கு 51 வயதாகிவிட்டது என கூறுகிறார்.
இந்த திருமணம் குறித்து Mittamoni கூறியதாவது, எங்கள் இனத்தின் பராம்பரிய முறைப்படி திருமணமான ஒரு பெண் விதவையாகிவிட்டால் அவர் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ளவேண்டும்.
அப்படி திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த விதவை பெண்ணிற்கு மகள் இருந்தால் அவளையும் சேர்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
எனது மகளுக்கு திருமணம் ஆகும்போது அவளுக்கு 3 வயது. தற்போது அவன் Noten-ஐ ஒரு கணவராகத்தான் கருத வேண்டும்.
இது எங்கள் பராம்பரியமான பழக்கம், இதனை நாங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தாய் கூறியுள்ளார்.
All in the family: Orola Dalbot (far right), and her three children with Noten (centre). Orola’s mother, Mittamoni (left) also has a son (standing behind her) and daughter with Noten. Photograph: Eric Rechsteiner for the Observer
தொடர்புடைய செய்தி
https://www.theguardian.com/theobserver/2013/jun/02/matrilineal-marriage-in-bangladesh