பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 93 ஆவது வயதில், விமானம் செலுத்துவதற்கு பயிற்சி பெறுகிறார்.
மொலீ மெக்கார்ட்னி எனும் இப்பெண் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரித்தானிய மகளிர் றோயல் கடற்படை சேவையில் பணியாற்றியவர்.
16 வயதில் அப்படையில் அவர் இணைந்தார். 17 வயதுக்கு குறைந்தவர்களை சேர்க்கமாட்டார்கள் என அறிந்திருந்ததால், நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது, தனது பிறப்புச் சான்றிதழை வீட்டில் மறந்துவைத்துவிட்டு வந்ததாக அவர் கூறினாராம்.
மகளிர் றோயல் கடற்படை சேவையில் இணைந்த பின்னரே அவருக்கு பெண்களும் விமானிகளாக பணியாற்றலாம் என்பது தெரிய வந்ததாம்.
அப்போது தனக்கு விமானம் செலுத்த முடியாமல் போன நிலையில், தற்போது 93 வயதில் விமானம் செலுத்தும் பயிற்சியில் ஈடுபடுகிறார் மொலீ மெக்கார்ட்னி.
லண்டனுக்கு அருகிலுள்ள விமானத் தளம் ஒன்றில், மெக்கார்ட்னி விமானம் செலுத்தும் பயிற்சியில் ஈடுபடுகிறார்.
இவர் குதிரையோட்டத்திலும் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.