வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாத் பதியுர்தீன் வீடுகளை வழங்கியிருந்தார் என வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தர்மபால செனவிரத்தின தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிய அரசின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்ன தலைமையில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலத்தில் அரசாங்கம் இருந்தா இல்லையா என்பது தெரியவில்லை. அவ்வாறான நிலையிலேயே பல செயற்பாடுகள் இடம்பெற்றன.
ரிஷாத் பதியுதீன் முஸ்லிம்கள் மட்டுமே இங்கு இருப்பதாக நினைத்து பல வேலைத்திட்டங்களை செயற்படுத்தியிருந்தார். எனினும் நாம் அவ்வாறு செய்யப் போவதில்லை. இங்கு வாழும் மூவின மக்களுக்கும் சமமாக வளங்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் ஒரே மாத்திரியான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாயவும் தெரிவித்துள்ளார்.
காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் பஸ் நிலையப் பிரச்சினைக்கு தீர்வை காணுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்.