நேபாளத்தில் நடைபெற்று வரும் 13ஆவது தெற்காசிய விளைட்டு விழாவில் இதுவரையில் இலங்கை அணி 35 தங்கப் பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த முறை இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 12 ஆது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது. ஆனால் இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
எனினும் இதில் விசேட அம்சமொன்னவென்றால் கடந்த முறை ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 25 தங்கப்பதக்கங்களை மாத்திரமே வென்றிருந்தது.
ஆனால் இம்முறை இதுவரையில் 30 தங்கப்பதக்கங்களையும் தாண்டி சென்றுக்கொண்டிருக்கின்றது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்கையில் இலங்கை அணி ஒரு சில போட்டிகளின் இறுதி வரை முன்னேறியுள்ளன.
அதில் தங்கப்பதக்கங்களை வென்றாலும் இரண்டாவது இடத்தை எட்ட முடியாது. ஆனால் மூன்றாமிடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.
மகளிர் மல்யுத்தத்தில் இரண்டு தங்கப்பதக்கங்கள்
பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் இலங்கை வீராங்கனைகளனா டில்ஹானி 65 கிலோகிராம் எடைப் பிரிவில் தங்கப்பதக்த்தையும், 72 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட அயோமி ஒரு தங்கப்பத்தக்த்தையும் வென்றனர்.
மேலும் ஆண்களுக்கான மல் யுத்தத்தில் 61 கிலோ கிராம் எடைப் பிரிவில் உதார வெண்கலம் ஒன்றையும், 62 கிலோ கிராம் மகளிர் பிரிவில் பிரியங்க வெள்ளி பதக்கம் ஒன்றையும் வென்று கொடுத்தனர்.
கரப்பந்தாட்டத்தில் வென்றதும் இலங்கை தோற்றதும் இலங்கை
கடற்கரை கரப்பந்தாட்டப்போட்டியின் இறுதியில் வென்றதும் இலங்கைதான் தோற்றதும் இலங்கைதான் என்றே சொல்லாம். காரணம் இறுதிப் பொட்டி போட்டியிட்ட இரண்டு அணியும் இலங்கை அணிகள்தான் தான். அதனால் தங்கமும் இலங்கைக்கு, வெள்ளியும் இலங்கைக்கு.
இது ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இருபாலாரிலும் இப்படியேதான் இறுதிப்போட்டி நடைப்பெற்றது.
கடலே இல்லாத நோபளத்தில் மழை உச்சியில் பிரத்தியேகமேக அமைக்கப்பட்ட கடற்கரை கரப்பந்தாட்டத்திற்கு ஏற்ற மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கைக்கு 2 தங்கம் 2 வெள்ளிப் பதக்கங்கள் சொந்தமானது.
கபடி அணியின் சாதனைப் பயணம்
தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கபடி போட்டிகளில் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை வீழ்த்தி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இது தெற்காசிய போட்டிகளின் கபடி வரலாற்றில் மிக முக்கியமானதொரு மைல்கல்லாக கருதப்படகின்றது.
தெற்காசியாவில் கபடியில் பெரிதும் ஆதிக்கம் செலுத்துவது இந்தியாவும் பாகிஸ்தானும்தான். இவ்விரு அணிகளும் மிகவும் பலம்பொருந்திய அணிகளாககத் திகழ்கின்றபோதிலும், இலங்கை அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது.
இந் நிலையில், இன்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் 35-20 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இதனால் தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கை அணி முதன் முறையாக கபடி போட்டிப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதன்படி இன்று இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெல்லும் அணி தங்கப்பதக்கத்தையும் தோற்கும் அணி வெண்கலப் பதக்கத்தையும் என்பது குறிப்பிடத்கத்கது.
28 வருடங்களுக்குப் பிறகு மெய்வல்லுனரினல் சம்பியனான இலங்கை
நேபாளத்தில் நடைபெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் மாத்திரம் 15 தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை அணி மெய்வல்லுநனர் போட்டிப் பிரிவுகளில் சம்பியன் என்ற கௌரவத்தைப் பெற்றுக்கொண்டது.
இந்த வரலாற்று சாதனையானது 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி அதிக தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இலங்கை மெய்வல்லுனர் அணி.
1991 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை மெய்வல்லுனர் அணி 15 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது. அதன்பிறகு இம்முறைதான் அந்த 15 மெய்வல்லுநனர் தங்கப்பதக்கங்களை சமப்படுத்தியயுள்ளது.
மெய்வல்லுனர் போட்டிகளின் 5 ஆவது நாளான இன்றைய தினம் 9 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றதுடன், இதில் நடைபெற்ற 8 போட்டிகளில் இலங்கை அணி வீரர்கள் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
அதேவேளை பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாக பங்கேற்ற ஹிருனி விஜேரத்ன தங்கப்பதக்கம் வென்றெடுத்தார்.
35 வருடகால தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை பெற்றுக் கொண்ட முதலாவது தங்கப் பதக்கம் இதுவென்றது விசேட அம்சமாகும்.
இறுதியாக 1999ஆம் ஆண்டு காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான மரதனில் இனோகா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.