வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் உள்ள அன்னதான மடம் ஒன்றில் இருந்து கடந்த சில நாட்களாக அன்னதானப் பொருட்கள் களவு போவதனை அவதானித்த நிர்வாகம் யாருக்கும் தெரியாமல் CCTV கமெராவினை பொருத்தி உள்ளது.
இதனை அறியாத பல நாள் திருடன் வழமை போல திருட சென்று கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
இவர் கற்கோவளத்தை சேர்ந்த முன்னாள் ரவுடிகளில் ஒருவர் என தெரிய வந்துள்ளது.இவரை தற்போது பருத்தித்துறை பொலிஸ் கைது செய்து சிறை வைத்துள்ளனர்.