தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலுள்ள அவநம்பிக்கைகள் அபிப்பிராய பேதங்கள் என்ற எதிர் மனப் போக்குகள் ஆயுத பண்பு கொண்ட குழுக்களுக்கு இடையே அடிக்கடி முனைப்பு பெற்றுக் கொண்டாலும் மாற்று தகைமைகளுக்கான சிந்தனைகளையோ எண்ணங்களையோ தோற்றுவிக்காத போக்கே இருந்து வந்துள்ளது.
இந்த போக்குக்கு ஒரு மாற்று நிலை உருவாக வேண்டிய தேவை. இரண்டு இடை நிலைப் புள்ளிகளிலிருந்தே ஆரம்பமாகின்றது என்பது ஒரு நிதர்சனமான உண்மை.
அந்த புள்ளிகள் பற்றி அதிகம் ஆராய வேண்டிய அவசியமில்லை. ஒன்று வடமாகாண சபைத் தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட ஆளுமை. இன்னொன்று தமிழ் தேசியம் தடுமாறிப் போகிறது என்ற அதிருப்திகளாலும் விரக்தியினாலும் உருவாக்கப்பட்ட புதிய அமைப்பு.
இவையிரண்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சவாலாகவும் கீரைக் கடைக்கு எதிர்க்கடையாகவும் பார்க்கப்பட்டதன் கூட்டு மொத்த விளைவையே இன்று எல்லோரும் பார்த்து கொண்டிருக்கின்றோம்.
தமிழ் மக்களுக்கு இன்று அவசியமானது அரசியல் தீர்வா? அபிவிருத்தியா? ஒற்றுமையா என்ற கேள்விக்கு விடையளிப்பதென்பது கடினமான காரியம்.
இத்தகைய குழப்பத்தை எல்லோர் மனதிலும் உண்டாக்கி விட்டிருப்பது வடமாகாண சபையின் கலவரங்களும் குழப்பங்களும் முரண்பாடுகளும் முட்டி மோதல்களுமாகும்.
மழை விட்டும் தூவானம் ஓயவில்லையென்பது போல் வடமாகாண சபையின் ஆட்சி முறைகளிலும் அதிகார வன்முறைகளிலும் பல கெடுபிடிகள் புதிது புதிதாக தலைதூக்கி கொண்டிருக்கின்றன.
வடமாகாண சபையின் முதலமைச்சருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளுக்கும் முட்டி மோதல்களுக்கும் முற்று புள்ளி வைத்தது போல் தென்பட்டாலும் நீறுபூத்த நெருப்பை போல் உள்ளடங்கி காணப்படும் முரண்பாடுகள் இன்னும் வெளிப்படவே செய்கின்றன.
வடமாகாண சபை முதல்வர் விவகாரத்தை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சாதுரியமாகவும் சாணக்கியமாகவும் கையாண்டு தீர்வை கொண்டு வந்திருக்கின்றபோதும் அது வேறு வேறு திசைகளில் வெடிக்கப் பார்க்கிறதென்பது கூட எதிர்பார்க்கப்படுகின்ற விடயந்தான்.
அரசியல் தீர்வு விவகாரம் கைகூடி வருகின்ற வேளையில் அல்லது அரசியல் யாப்புக்கான முன்னெடுப்புக்கள் தீவிரம் அடைந்து காணப்படுகின்ற நிலையில் தமிழ் தரப்பினர் மத்தியில் குறிப்பாக வட மாகாண ஆட்சியை நடத்தி கொண்டிருக்கும் ஆளும் தரப்பினர்களுக்கு இடையே முரண்பாடுகளும் முட்டி மோதல்களும் இடம்பெற்று கொண்டிருக்கின்றன.
தமிழர் தரப்பினரிடையே ஒற்றுமையில்லை. ஒருமித்த திசை நோக்கிய பயணம் இல்லாமல் ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு தலைமைகளும் தம் தம் திசை நோக்கிப் பயணிக்க முற்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் சகல தரப்பினராலும் முன்வைக்கப்படும் நிலையே காணப்படுகிறது.
இவ்வாறான கருத்துக்கள் உள்ளூர் மக்களான வட கிழக்கு மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, தென்னிலங்கை பெரும்பான்மை மக்களிடமும் அவர்களின் தலைமைகளிடம் கூட ஏற்பட்டிருப்பது கவலை தரும் விடயந்தான்.
இதற்கு அப்பால் சர்வதேச சமூகம் மற்றும் நாட்டின் தலைவர்கள் என்ற வகையிலும் இக் குழப்ப நிலைகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளமை நிலைமைகளை சிக்கலாக்கும் போக்காகவே காணப்படுகிறது.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் தமிழ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் குழப்பம் முரண்பாடு பிணக்கு என்ற விவகாரங்கள் எதிரிகளுக்கும் மாற்றானுக்கும் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிட்ட நிலைமையே உருவாக்கியிருக்கிறது.
ஆயுதப் போர் மௌனிப்புக்கு பின் ஒரேயொரு மாற்று வழியாக தமிழ் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதையாக இருந்தது கூட்டமைப்பு எனும் ஆபத்து வாய்ந்தவனென்று கூறப்படுகின்ற இரட்சகன். இதை புறக்கணித்தோ அல்லது விலத்திக் கொண்டோ இன்னுமொரு பாதையை மார்க்கத்தை தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்பு தமிழ் மக்களுக்கு இருந்ததேயில்லை.
தமிழரசுக் கட்சியெனும் மரபு வழிக்கட்சியோடு இணைக்கப்பட்ட ஆயுதப் பண்பு கொண்ட…. கட்சிகளையும் இணைத்துக்கொண்ட கூட்டமைப்பின் பின்னே செல்ல வேண்டிய தேவை 2010 ஆம் ஆண்டுக்குப் பின் வட கிழக்கு மக்களுக்கு ஏற்பட்டது.
தவிர்க்கப்பட முடியாத விடயம். இருந்த போதிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை தலைமைக்கட்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் உருவாகியது உண்மையே!
இன்னொருவகையில் கூறுவதானால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையின் கீழ் எல்லோரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டிய அவசியமும் உணரப்பட்டது.
இருந்த போதிலும் கூட்டணிகள் நீடித்த வாழ்க்கை கொண்டதாக இருப்பதில்லையென்பது பொதுவான அபிப்பிராயம் மாத்திரமின்றி உலகில் பல உதாரணங்களுமுண்டு.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்பது போர் முடிவுக்குப் பின்னுள்ள நிலைமைகளில் தமிழ் மக்களைத் தாங்கிப் பிடிக்கும் கட்சியாகவே கருதினார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இடையிடையே கூட்டமைப்பு பதியப்பட வேண்டும். அரசியல் கட்சியாக மாற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் இடைக்கிடை எழுந்தது மாத்திரமின்றி அது உட்கட்சி போராட்ட நிலைமைகளை உருவாக்கியிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலுள்ள அவநம்பிக்கைகள் அபிப்பிராய பேதங்கள் என்ற எதிர் மனப் போக்குகள் ஆயுத பண்பு கொண்ட குழுக்களுக்கு இடையே அடிக்கடி முனைப்பு பெற்றுக் கொண்டாலும் மாற்று தகைமைகளுக்கான சிந்தனைகளையோ எண்ணங்களையோ தோற்றுவிக்காத போக்கே இருந்து வந்துள்ளது.
இந்த போக்குக்கு ஒரு மாற்று நிலை உருவாக வேண்டிய தேவை. இரண்டு இடை நிலைப் புள்ளிகளிலிருந்தே ஆரம்பமாகின்றது என்பது ஒரு நிதர்சனமான உண்மை.
அந்த புள்ளிகள் பற்றி அதிகம் ஆராய வேண்டிய அவசியமில்லை. ஒன்று வடமாகாண சபைத் தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட ஆளுமை. இன்னொன்று தமிழ் தேசியம் தடுமாறிப் போகிறது என்ற அதிருப்திகளாலும் விரக்தியினாலும் உருவாக்கப்பட்ட புதிய அமைப்பு.
இவையிரண்டுமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு சவாலாகவும் கீரைக் கடைக்கு எதிர்க்கடையாகவும் பார்க்கப்பட்டதன் கூட்டு மொத்த விளைவையே இன்று எல்லோரும் பார்த்து கொண்டிருக்கின்றோம்.
இன்னுமொரு விடயத்தையும் இங்கு கூட்டிப் பார்க்க வேண்டும். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது வேட்பாளர் நியமனப் பட்டியல் காரணமாக உண்டாகிய மனத் தாக்கங்களும் பக்கவிளைவுகளும் கூட்டமைப்பின் போக்கை ஒரு ஆரோக்கியமான வழியில் நடத்திச் செல்லவில்லை.
இவ்வாறு பார்க்கின்ற போது வரலாற்று மயமான முரண்பாடுகளும் பூசல்களுமே வட கிழக்கின் இன்றைய ஒட்டுமொத்த விளைவுகளுக்கு அடிபூண்ட காரணமாக இருந்திருக்கிறது.
இதனுடன் இன்னுமொரு விடயத்தையும் இணைத்து கொள்ள வேண்டும். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் முடிவுகளின் படி கூட்டமைப்புக்கு எதிர்பாராமல் கிடைத்த தேசியப் பட்டியல்கள் இரண்டு.
இவ் விவகாரங்களை ஒரு பட்டறிவாகவோ அல்லது அனுமானமாகவோ கொண்டு பார்க்கின்ற போது ஒரு உண்மை புலப்பட முடியும்.
இவையெல்லாம் சொல்லாமல் கொள்ளமாமல் நேற்று முளைத்தவையாகவோ அல்லது இன்று உருவாகியதாகவோ கொள்ள முடியாது.
வடமாகாணத்தின் அனைத்து நிலைமைகளிலும் ஒரு வரலாற்று ஓட்டம் உட்கலந்து வருவது வெளிப்படையாகவே புலப்படுகின்ற விடயம்.
வட கிழக்கு விவகாரம் இவ்வளவு தீவிரம் கொண்டமைக்கான காரணமென்ன? இவ் விவகாரத்தில் கூட்டுக் கட்சியென்ற வகையில் ஆயுதப் பண்புகள், கொண்ட கட்சிகள் விட்டதவறென்ன.
தலைமைக் கட்சியென்ற வகையில் தமிழரசுக் கட்சி தனது ஆளுமைப் போக்கை எவ்வாறு நெறிப்படுத்தியிருக்க வேண்டும் என்பது அறியப்பட வேண்டிய தகவல்.
வடமாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆளுகைக்கு உட்படுத்தினாலும் தமிழரசுக் கட்சி சார்ந்த உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கை கொண்டவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
இருந்தபோதிலும் கூட்டமைப்பு என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஏனைய கட்சிகளும் சமபலம் கொண்டவை என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே மதிக்கப்பட்டது மாத்திரமின்றி பதவிகளும் பங்கிடப்பட்டிருந்தன.
2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து 2015 ஆம் ஆண்டு நல்லாட்சியென்ற பெயரில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சி அமைக்கப்படும் வரை வடமாகாண சபை மத்திய அரசின் எதிர்வாதிகளாகவே இயங்கினார்கள் என்பது பொதுவான உண்மை.
இன்னும் விபரமாக கூறுவதாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிப் போக்கை நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்க்கும் சபையாகவே வடக்கு மாகாண சபை இருந்து வந்துள்ளது.
இவ்வாறானவேளைகளிலெல்லாம் மாற்றுக் கட்சிகள் மத்திய அரசை ஆதரிக்கும் நிலை காணப்பட்டபோதும் கூட்டமைப்பு அந்த கைங்கரியத்தை செய்யவுமில்லை.
செய்வதற்கு ஏற்ற நிலையும் இருக்கவில்லை. கூட்டமைப்பு ஒரு கூட்டு கட்சிகளின் கலப்பாக இருந்தபோதிலும் இவை அனைத்தினது நோக்கமும் போக்கும் ஒன்றாகவே இருக்க வேண்டியிருந்தது.
எப்பொழுது நல்லாட்சி உருவாக்கப்பட்டதோ அங்கிருந்துதான் பிணக்குகளுக்கான அடியிடுகை இடப்பட்டிருக்கிறது என்பது ஒரு சாதாரண வாய்ப்பாடு. இவற்றின் பின்னணியில் பல பிரயோகங்கள் இருந்தது என்பதும் உண்மையே!
உண்மையில் வடக்கு மாகாண சபையின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தூண்டுகோலாக மாகாண சபையில் அங்கம் பெறும் அனைத்து கட்சிகளும் ஒத்து ஊதியுள்ளார்கள் என்பது ஒரு கசப்பான உண்மைதான்.
அமைச்சர்கள் பல்வேறுவிதமான ஊழல்களிலும் மோசடிகளிலும் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை பொது மக்களை விட மாகாண சபை உறுப்பினர்களே சபையில் வேண்டிய நேரமெல்லம் விமர்சித்துள்ளார்கள். பிரஸ்தாபித்துள்ளார்கள்.
அவ்வாறு இருந்த நிலை ஏன் மாறியது என்பதற்கு சரியான காரணத்தை கண்டுகொள்ள முடியாவிட்டாலும் ஊழல் மோசடி என்ற விவகாரங்கள் வந்த போது தங்கள் தங்கள் கட்சிகளை சுதாகரித்து கொள்ள நினைக்காமல் உண்மை தன்மைக்காக கூட்டுக் குரல் கொடுத்திருக்க வேண்டும்.
குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பது இயற்கையான நியதி. ஆனால் உத்தியோகபூர்வமான குற்றம் காணப்படாதவர்களையும் எதிர்காலத்தில் குற்றவாளிகளாக காண வேண்டுமென்ற நோக்கில் நியதிகளையும் சட்டங்களை மாற்ற வேண்டி வந்ததன் பலாபலனே இன்று வடமாகாண சபை நாற்றமெடுப்பதற்கான சபையாக ஆக்கப்பட்டிருக்கிறது.
இது தார்மீக அடிப்படையிலும் சமூகம் சார்ந்த வகையிலும் சிந்திக்கப்பட வேண்டிய விடயம். உரிமைக்காகப் போராடிய ஒரு சமூகத்தின் எல்லாப் பிரகிருதிகளுமே ஊழலும் மோசடியும் கொண்டவர்கள் என்ற உலகளாவிய அளவில் தப்பான அபிப்பிராயத்தை உருவாக்கும் அளவுக்கு எல்லாமே நடந்தேறி விட்டது.
கொச்சை தமிழில் கூறுவதனால் நீங்கள் எல்லோருமே கள்ளர். நீங்களா போராடினீர்கள் என்று கை நீட்டி ஏளனப்படுத்தும் அளவுக்கு எல்லாமே தலை கீழாக்கப்பட்டு விட்டது.
இன்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயம் மாற்றங்கள் அபிவிருத்திகள், அரசியல் தீர்வு என்ற அளவுகளுக்கும் அப்பால் ஒற்றுமையென்ற விடயம் முன் நிலைப்படுத்த வேண்டியுள்ளது.
வட கிழக்கிலுள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளுக்கு இடையில் நேரான சீரான ஒற்றுமையை கொண்டுவர வேண்டிய கால கட்டத்தில் வந்து நிற்கின்றோமென்பது தான் யதார்த்தம்.
ஏலவே எல்லாவகையிலும் எதை எதையோவெல்லாம் நம்பி ஏமாந்து போனவர்களாக தமிழ் மக்கள் காணப்படுகின்றார்கள். இன்றைய சூழலில் ஒற்றுமையைப் பலப்படுத்துவதே காலத்தின் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கூட்டமைப்பினர் சந்தித்து உரையாடிய போது அவர் வலியுறுத்திய ஒரு விடயம். தமிழ் மக்களுக்கு இடையிலான ஒற்றுமை.
இந்த ஒற்றுமையை மக்கள் வேண்டி நிற்கின்றபோதும், மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்கின்ற கட்சியாளர்கள் தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு தங்கள் கட்சியையும் தங்களையும் பெருமைப்படுத்த நினைக்கின்றார்களே தவிர மக்களின் நோக்கங்களையும் அபிப்பிராயங்களையும் நிறைவேற்றுபவர்களாக காணப்படுவதில்லை.
இவர்களுடைய இப்பிரிப்பாண்மையால் மக்கள் தங்களுக்குள் தாங்கள் மோதிக் கொள்வது மாத்திரமின்றி தலைவர்களை நிந்திப்பதும் விமர்சிப்பதுமான மோசமான நிலைமைகளே உருவாக்கி விடப்படுகிறது.
வெண்ணெய் திரண்டு வருகின்ற வேளையில் தாழி உடைந்த கதைபோலவே தமிழர்களுடைய இன்றைய நிலை காணப்படுகிறது. இதற்குரிய பரிகாரங்கள் எங்கிருந்து கொண்டுவரப்படவுள்ளது என்பதே எஞ்சி நிற்கும் கேள்வியாகும்.
தமிழ் மக்களுக்கான கட்சிகள் ஒவ்வொன்றும் தம்மிடையேயுள்ள மன வீக்கங்களையும் கௌரவங்களையும் தூக்கி ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு தம்மிடையேயுள்ள ஒற்றுமையைப் பலப்படுத்தும் கைங்கரியங்களை முன்னிலைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தம்மைத்தாமே சுய விமர்சனத்துக்கு உள்ளாக்குவதன் மூலமே பெறுமதிமிக்க முடிவுகளையோ தீர்மானங்களையோ எடுக்க முடியும்.
இக்கட்டுரையின் முற்பகுதியில் குறிப்பிட்டது போல் கூட்டு கட்சிகள் அல்லது கூட்டணிகளின் ஆயுட்காலமென்பது நீண்டகால வாழ்வைக் கொண்டதல்ல என்பதை உலக மற்றும் உள்ளூர் நிலைமைகளை படிப்பினையாக கொண்டு நாம் அறிந்து கொண்டாலும் அதை பொய்யாக்குகின்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கின்ற கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, புௌாட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய அனைத்து கட்சிகளும் அமைப்பை பலப்படுத்த வேண்டும்.
அதற்கு ஒன்றுக்கொன்றான விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளவும் தியாகம் பண்ணவும் தயாராக இருக்கின்ற நிலையிலேயே தமிழ் மக்களின் பலமும் ஒற்றுமையும் இந்த கூட்டமைப்பின் ஒற்றுமை மூலம் நிரூபிக்கப்பட முடியும்.
சில வேளைகளில் தமது பலத்தை பரீட் சித்து காட்டவோ அல்லது மக்கள் செல்வாக்காளர் நாமென்று விதண்டாவாதம் பேசி தனிப்போக்கை யாராவது கடைப்பிடிக்க எத் தனிப்பார்களானால் அது விபரீதமாகவும் மாற்று விளைவுகளையும் தந்து விடுமென்பதை ஒவ்வொரு கட்சியும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உண்மையை சொல்வதனால் பேதங்க ளையும் பிணக்குகளையும் முரண்பாடு களை யும் மறந்து விட்டு ஒற்றுமையை பலமாக கட்டி யெழுப்ப வேண்டிய கால கட்டம் மாத் திரமல்ல. சந்தர்ப்பங்களும் இல்லாமல் போய்விடு மென்பதை உணர வேண்டும்.
திருமலை நவம்