மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்படாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணுக்கு மற்றொருவருடன் திருமணம் முடிந்தது. இந்த வினோத சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
கான்பூரை சேர்ந்தவர் நேகா (25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
மணமகன் வீட்டிலும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. திருமணம் நெருங்கிய நிலையிலும் மணமகன் வீட்டில் கழிவறை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை உடனடியாக நிறுத்தினார் நேகா.
அனைத்து வீடுகளிலும் கட்டாயம் கழிவறை கட்ட வேண்டும் என்ற சுகாதாரத் திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் நேகா எடுத்த முடிவினை பலதரப்பினர் வரவேற்றனர்.
நேகாவின் முடிவை பாராட்டிய தொண்டு நிறுவனம் ஒன்று, அவருக்கு திருமணம் செய்து வைக்கும் பணியை தொடங்கியது. அதன்படி மற்றொரு மணமகனை பார்த்து அவருக்கு மிகப்பெரிய அளவில் திருமணத்தை செய்து வைத்துள்ளது. புது மணமகனின் வீட்டில் கழிவறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து நேகா கூறுகையில், “வாலிபர் வீட்டில் கழிவறை கட்டுவதாக வாக்குறுதி கொடுத்தனர், ஆனால் கட்டவில்லை. எனவே திருமணத்தை நிறுத்தினேன்.