மாத்தளை – கந்தேநுவர பகுதியில் இரண்டு மாதங்களுக்கும் குறைவான குழதை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிட்டகந்தகம பகுதியின் பிரதான வீதியில் நேற்று அதிகாலை குறித்த குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குழந்தை மீட்கப்பட்டு, மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.