கடந்த வருடத்தில் இடம்பெற்ற இரண்டாயிரத்து 947 வீதி விபத்துக்களில் மூவாயிரத்து 126 பேர் உயிரிழந்திருப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துக்களேயாகும். இவற்றின் எண்ணிக்கை ஆயிரத்து 18 ஆகும். இந்த விபத்துக்களில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர் என்று வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தலைவர் டொக்டர் சிசிற கோத்தாகொட தெரிவித்தார்.
950 பாதசாரிகளும் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் சமீபத்தில் நடைபெற்ற வீதி பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை தேசிய சபை தலைவர் குறிப்பிட்டார்.